செய்திகள் :

ராஜஸ்தானுடன் இணைந்தார் 13 வயது வீரர்! ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டவர்!

post image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் மிக இளம் ஐபிஎல் வீரர் என்ற பெருமையை பெற்ற வைபவ் சூரியவன்ஷி இணைந்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நினைவுகூரத்தக்கது.

ரூ.1.10 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்தாண்டு இறுதியில் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் ரூ.30 லட்சம் அடிப்படை விலை கொண்ட வைபவ் சூரியவன்ஷியை, ரூ.1.10 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்து, ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.

12 வயதில் படைத்த சாதனைகள்

ரஞ்சி டிராபியில் பிகார் அணிக்காக தனது முதல் தரப்போட்டியில் அறிமுகமானவர் வைபவ் சூரியவன்ஷி. பிகாருக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய இரண்டாவது இளைய வயதுடையவர் ஆவார்.

பிகார் அணிக்காக வினூ மன்கட் டிராபியில் விளையாடி 5 போட்டிகளில் சுமார் 400 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச போட்டியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை, 19 வயதுக்குள்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார்.

1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான மிகவும் இளைய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இதையும் படிக்க : இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படும் ஐசிசி..! மே.இ.தீ. லெஜண்ட் கடும் விமர்சனம்!

இந்த நிலையில், அணியுடன் இணைந்த வைபவ் சூரியவன்ஷியை வரவேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் விடியோவை வெளியிட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 23ஆம் தேதி ராஜஸ்தான் விளையாடவுள்ள முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக வைபவ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் ட... மேலும் பார்க்க

டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் ந... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சா... மேலும் பார்க்க

எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!

வங்கதேச வீரர் மஹ்மதுல்லா (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மஹ்மதுல்லா வங்கதேசத்தில் அதிகமாக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கிறார். அனைத்து ஐசிசி தொடர... மேலும் பார்க்க

விரைவில் நியூசி. ஐசிசி கோப்பையை வெல்லும்: ரிக்கி பாண்டிங்

ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியூசிலாந்து அணி விரைவில் கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் 49ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித... மேலும் பார்க்க