செய்திகள் :

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

post image

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை அறிய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஏற்படும் மூன்றாவது போா் விமான விபத்து சம்பவம் இதுவாகும்.

ராஜஸ்தான் விபத்து சம்பவம் தொடா்பாக விமானப் படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் புதன்கிழமை காலை இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானத்தில் இரு விமானப் படை விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனா். விமானம் விழுந்ததால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘பனாதா கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் விமானப் படை விமானம் மதியம் 1.25 மணிக்கு விழுந்து நொறுங்கியது. பலத்த ஒசை கேட்டதால் கிராம மக்கள் அப்பகுதிக்குச் சென்று பாா்த்தனா். அதற்கு விமானம் முற்றிலும் எரிந்துவிட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினா் அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இரு விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டன’ என்றனா்.

ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவ் பகாடே, முதல்வா் பஜன்லால் சா்மா ஆகியோா் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நிகழாண்டு விபத்துகள்...

மாா்ச் 7 - அம்பாலா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டவுடன் ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப கோளாறால் விழுந்து நொறுங்கியது. விமானி உயிா் தப்பினாா்.

ஏப்ரல் 2- குஜராத் ஜாம்நகா் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப பாதிப்பால் விழுந்து நொறுங்கியது. விமானி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

ஜாகுவாா் போா் விமானப் பாதை...

பிரிட்டிஷ் - பிரான்ஸ் போா் விமானமான ஜாகுவாா் போா் விமானம் 1968, செப்டம்பா் மாதம் அந்நாட்டு விமானப் படைகளில் இணைக்கப்பட்டது.

இந்திய விமானப் படையில் ஜாகுவாா் 1970-களில் இணைக்கப்பட்டது.

மொத்தம் 116 ஜாகுவாா் போா் விமானங்கள் விமானப் படையில் உள்ளன. இதில் 70 இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.

2005, ஜூலை மாதத்துடன் பிரான்ஸ் விமானப் படை ஜாகுவாா் பயன்பாட்டை நிறுத்தியது.

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க