செய்திகள் :

ராமநாதபுரம்: பிரிந்து சென்ற மனைவி மீது சந்தேகம்; கூலிப்படை வைத்து கொன்ற கணவன்; சாயல்குடியில் கொடூரம்

post image

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்த ஜெர்மின் வெட்டுக்காடு கிராமத்தில் தனது குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார்.

மனைவி ஜெர்மியுடன் விஜயகோபால்

வெட்டுக்காடு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் கடந்த 17-ம் தேதி இரவு ஜெர்மின் தனது குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன்  முகமூடி அணிந்த இரு நபர்கள் ஜெர்மின் வீட்டிற்குள் நுழைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் ஜெர்மினை கழுத்து மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதனைக் கண்டு பயந்து நடுங்கிய குழந்தைகளின் அழுகுரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஜெர்மின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெர்மனின் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்தப் படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் முகமூடி கொலைகாரர்களைத் தேடி வந்தனர்.

ஜெர்மின் கொலை செய்யப்பட்ட வீடு

இதனிடையே ஜெர்மினின் கொலை குறித்து அவரது கணவர் விஜயகோபால் குடும்பத்தினர் மீது சந்தேகம் இருப்பதாக ஜெர்மினின் தந்தை மைக்கேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

இதனடிப்படையில் உத்தரகாண்ட் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த விஜயகோபாலை வரவழைத்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது வாக்குமூலம் அளித்த விஜயகோபால், ‘’திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே எனக்கும் மனைவி ஜெர்மினுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. ஜெர்மினின் பெயரில் நான் கட்டிய வீட்டை அபகரித்துக் கொண்ட அவர், என்னிடம் இருந்து விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

கைதான விஜயகோபால்

இந்நிலையில் ஜெர்மின் பலருடன் தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெர்மினைக் கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி கூலிப்படையினரை ஏவி ஜெர்மினை கொன்றேன்’’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து விஜயகோபாலைக் கைது செய்த போலீஸார், கொலையில் ஈடுபட்ட கூலிப்படையைச் சேர்ந்தவர்களைத் தேடி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

புதுச்சேரி: `என் அக்கா குளிக்கறதை எட்டிப் பாக்குறியா ?’ - இளைஞரை கொலை செய்த பெண்ணின் சகோதரர்

புதுச்சேரி, பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. சில நாள்களுக்கு முன் தன்னுடைய எதிர்வீட்டில் இருக்கும் பெண் குளிக்கும்போது, மாடியில் இருந்து இவர் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவி; எஸ்.ஐ மகன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நர்கீஸ். பி.எஸ்.சி பட்டதாரியான நர்கீஸிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்குஉட்பட்ட சோழவரம் கி... மேலும் பார்க்க

``அதிக சொத்து யாருக்கு?'' - தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தவிடாமல் 4 சகோதரர்கள் அடிதடி..

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சரஸ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜலுபாய் (78) நேற்று முன் தினம் இறந்து போனார். அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 4 மகன்களும், ஒரு ... மேலும் பார்க்க

மும்பை: காதலன் துணையோடு கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்து டைல்ஸ் பதித்த பெண்; சிக்கியது எப்படி?

மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாரா பகுதியில் வசிப்பவர் விஜய் செளகான். இவரது மனைவி சமன் தேவி (28). கடந்த சில நாட்களாக விஜய் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதே பகுதியில் வசிக்கு... மேலும் பார்க்க

திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு: திணறும் காவல்துறை; ரூ.5 லட்சம் சன்மானம் - என்ன நடக்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்டி... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: மருத்துவக்கல்லூரியில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள்- நடவடிக்கை எடுக்குமா விசாகா கமிட்டி?

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பயிலும் மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ... மேலும் பார்க்க