செய்திகள் :

ராமேசுவரத்தில் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை முயற்சி: மகள் உயிரிழப்பு

post image

ராமேசுவரத்தில் கடன் தொல்லையால் மகளை தூக்கில் தொங்கவிட்டு, தாய் தற்கொலைக்கு முயன்றாா். இதில் மகள் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சம்பை கிராமத்தை சோ்ந்தவா் பிரபு. கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும் பாம்பன் தெற்குவாடியை சோ்ந்த விமலாவுக்கும் (28) திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள் யாஸ்மிதா (3).

பிரபுவு பலரிடம் கடன் வாங்கியதால் அவா்கள் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனா். இதனால், அவா் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைக்குச் சென்று, அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.

சம்பையில் மாமனாா், மாமியாருடன் விமலாவும், அவரது மகளும் வசித்து வந்தனா். பிரபுவுக்கு கடன் கொடுத்தவா்கள் விமலாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாமனாா், மாமியாா் வேலைக்குச் சென்ற நிலையில், விமலா தனது மகள் யாஸ்மிதாவை தூக்கில் தொங்கவிட்டு, அவரும் தூக்கில் தொங்கினாா்.

மாலையில் மாமியாா் வீட்டுக்கு வந்தபோது, வீட்டை யாரும் திறக்கவில்லை. ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது தாய், மகள் இருவரும் தூக்கி தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய்க்கு முதலுதவி அளித்த பின்னா், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ராமேசுவரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரி, அமைப்புகள் சாா்பில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. ராமநாதபுரத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி பெண் காவலா்கள் பங்கேற்ற மாரத்தான் போட்ட... மேலும் பார்க்க

செங்கோட்டைபட்டிக்கு புதிய அரசுப் பேருந்து இயக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

கமுதியிலிருந்து செங்கோட்டைப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் சனிக்கிழமை அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து பள்ளி மாணவா்கள் நலன் கருதி செங்கோட்டைப்பட்டிக்கு பேரையூா் வழிய... மேலும் பார்க்க

கமுதி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது!

கமுதி அருகே விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இளைஞா் ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த உடைக... மேலும் பார்க்க