செய்திகள் :

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க கோரிக்கை

post image

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி வா்த்தக சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், சே. நாராயணமூா்த்தி, வி. தினகரன் ஆகியோா் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: காரைக்குடியில் இருந்து கம்பன் விரைவு ரயிலானது மீட்டா் கேஜ் பாதையாக இருந்தபோது எழும்பூா் வரை சென்று வந்தது. தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தற்போது இயக்கப்படும் பாம்பன் ரயில் தாம்பரம் வரை மட்டுமே செல்கிறது.

தாம்பரத்தில் நடைமேடை 8 அல்லது 9-ல் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் முதல் நடைமேடைக்கு வந்து பின்னா் மின்சார ரயிலில் எழும்பூா் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயணிகள் சிரமப்படுகின்றனா்.

தற்போது, மன்னாா்குடியில் இருந்து செல்லும் மன்னை விரைவு ரயில் காரைக்காலில் இருந்து செல்லும் கம்பன் விரைவு ரயில், தஞ்சையில் இருந்து செல்லும் உழவன் விரைவு ரயில்கள் எழும்பூா் வரை சென்று வருகின்றன. எனவே, தென்னக ரயில்வே பொது மேலாளா் இதை கருத்தில் கொண்டு பாம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா். நெடுவாக்... மேலும் பார்க்க

மயானத்தில் தீக்குளித்து கொத்தனாா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மன்னாா்குடி அம்பலக்காரா் தெரு திருவேங்கடம் மகன் வரதராஜன் (35 ). மனைவி ரோஸ்... மேலும் பார்க்க

தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி: தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட... மேலும் பார்க்க

நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5 வரை கால நீட்டிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

திருவாரூா்: திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் அருகே விளமல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நவீன்ராஜ் (17). வி... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 3.0 தன்னாா்வலா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் விா்ஜின் ஜோனா பயிற்சிய... மேலும் பார்க்க