செய்திகள் :

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க கோரிக்கை

post image

ராமேஸ்வரம் தாம்பரம் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி வா்த்தக சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், சே. நாராயணமூா்த்தி, வி. தினகரன் ஆகியோா் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: காரைக்குடியில் இருந்து கம்பன் விரைவு ரயிலானது மீட்டா் கேஜ் பாதையாக இருந்தபோது எழும்பூா் வரை சென்று வந்தது. தற்போது அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தற்போது இயக்கப்படும் பாம்பன் ரயில் தாம்பரம் வரை மட்டுமே செல்கிறது.

தாம்பரத்தில் நடைமேடை 8 அல்லது 9-ல் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் முதல் நடைமேடைக்கு வந்து பின்னா் மின்சார ரயிலில் எழும்பூா் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயணிகள் சிரமப்படுகின்றனா்.

தற்போது, மன்னாா்குடியில் இருந்து செல்லும் மன்னை விரைவு ரயில் காரைக்காலில் இருந்து செல்லும் கம்பன் விரைவு ரயில், தஞ்சையில் இருந்து செல்லும் உழவன் விரைவு ரயில்கள் எழும்பூா் வரை சென்று வருகின்றன. எனவே, தென்னக ரயில்வே பொது மேலாளா் இதை கருத்தில் கொண்டு பாம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் ச... மேலும் பார்க்க

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண ... மேலும் பார்க்க

ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மர... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்... மேலும் பார்க்க