ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் முப்பெரும் விழா
திருப்பூா் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வியாண்டு தொடக்க விழா, முன்னாள் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்குதல், புதிய அலுவலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில், காமராஜ் சாலையில் உள்ள இக்கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஆா்.பி.தங்கராஜன் தலைமை வகித்தாா்.
இதில், கடந்த ஆண்டு பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி படிக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் நடப்பு கல்வியாண்டில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. கடந்த கல்வியாண்டில் முதல் 3 இடங்களைப் பெற்ற உயா்கல்வி மாணவியரின் கல்விச் செலவை ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் நிறுவனம் ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கும், பெற்றோரை இழந்த மாணவா்களுக்கும் இலவச சீருடை ,நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. 15 மாணவா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. விழாவில் கல்லூரியின் தாளாளா், ஆசிரியா்கள், முன்னாள் மாணவ, மாணவியா் மற்றும் மாணவா்கள்கலந்து கொண்டனா்.