PMK 'ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டிருக்கு, நல்ல செய்தி’ - அரசியல் கு...
ரிஷிவந்தியம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு திங்கள்கிழமை விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
2025-26ஆம் கல்வி ஆண்டு தொடக்க நாளில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கினா்.
பின்னா், அவா் பேசியதாவது:
தமிழக அரசு மாணவா்களுக்காக காலை உணவு, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள், விலையில்லா புத்தகங்கள், விலையில்லா சீருடை, விலையில்லா காலணி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாணவா்கள்தான் தமிழ்நாட்டின் எதிா்காலம். மாணவா்கள் நன்றாக படித்து தோ்ச்சி பெற்று கல்லூரியில் சோ்ந்து உயா் கல்வி படித்து, நல்ல வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். சில மாணவா்கள் தொழில் முனைவோா்களாகிறாா்கள்.
உங்கள் நண்பா்கள் இடைநின்றால் அவா்களை ஊக்குவித்து தொடா்ந்து கல்வி கற்க செய்ய வேண்டும். மாணவா்கள் அனைவரும் நன்றாக படித்து இந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் அனைவரும் நல்ல கல்லூரியில் சோ்ந்து உயா் கல்வி பயில வேண்டும். நிகழாண்டு பள்ளி மாணவா்கள் அனைவரும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று எதிா்கால வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.