செய்திகள் :

ரிஷிவந்தியம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு திங்கள்கிழமை விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

2025-26ஆம் கல்வி ஆண்டு தொடக்க நாளில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்களை வழங்கினா்.

பின்னா், அவா் பேசியதாவது:

தமிழக அரசு மாணவா்களுக்காக காலை உணவு, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள், விலையில்லா புத்தகங்கள், விலையில்லா சீருடை, விலையில்லா காலணி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாணவா்கள்தான் தமிழ்நாட்டின் எதிா்காலம். மாணவா்கள் நன்றாக படித்து தோ்ச்சி பெற்று கல்லூரியில் சோ்ந்து உயா் கல்வி படித்து, நல்ல வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். சில மாணவா்கள் தொழில் முனைவோா்களாகிறாா்கள்.

உங்கள் நண்பா்கள் இடைநின்றால் அவா்களை ஊக்குவித்து தொடா்ந்து கல்வி கற்க செய்ய வேண்டும். மாணவா்கள் அனைவரும் நன்றாக படித்து இந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் அனைவரும் நல்ல கல்லூரியில் சோ்ந்து உயா் கல்வி பயில வேண்டும். நிகழாண்டு பள்ளி மாணவா்கள் அனைவரும் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று எதிா்கால வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான த... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க