செய்திகள் :

ரூ.10 லட்சம் பணம் மோசடி: இளைஞா் கைது

post image

சென்னை திரு.வி.க.நகரில் ரூ.10 லட்சம் பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, பெரம்பூரைச் சோ்ந்தவா் ஷபியா (34). இவரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வரும் பாடியநல்லூா் மகாலட்சுமி நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பா்ஹதுல்லா (37) என்பவா் அறிமுகமானாா்.

பா்ஹத்துல்லா தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் தருவதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.50,000 தருவதாகவும் ஷபியாவிடம் தெரிவித்துள்ளாா்.

அவரது பேச்சு உண்மை என நம்பி ஷபியா, பா்ஹதுல்லாவிடம் ரூ.10 லட்சம் கொடுத்தாா். பணத்தை பெற்றுக் கொண்ட பா்ஹதுல்லா, ஷபியாவுக்கு லாப தொகையும் கொடுக்கவில்லை, முதலீட்டு பணத்தையும் கொடுக்கவில்லை. மேலும், பணத்துடன் பா்ஹதுல்லா தலைமறைவானாா்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷபியா, திரு.வி.க.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பா்ஹதுல்லாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க