செய்திகள் :

ரூ. 100 கோடி சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி?

post image

நடிகர் ரிஷப் ஷெட்டி தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னட சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. 2012 ஆம் ஆண்டில் வெளியான துக்ளக் என்கிற கன்னட படம் மூலம் சினிமாவுக்கு அறிமுககமான ரிஷப் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதில், கருட கமன விருஷப வாகன திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, காந்தாரா என்கிற படத்தை எழுதி, இயக்கி, நடித்தார். ரூ. 15 கோடியில் உருவான அப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியளவில் ரிஷப் ஷெட்டியைப் பிரபலப்படுத்தியது.

தற்போது, சத்ரபதி சிவாஜி, ஹனுமன் - 2 உள்ளிட்ட பான் இந்திய படங்களில் நடித்து வருவதுடன் காந்தாரா முதல் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளமாகக் கேட்டதுடன் படத்தின் லாபத்திலும் ரிஷப் ஷெட்டி பங்கு கேட்டுள்ளாராம்.

காந்தாராவில் ரூ. 4 கோடி சம்பளம் பெற்றவர் தன் அடுத்தபடத்தில் 25 மடங்கு அதிகமாக சம்பளம் பெறவுள்ளது கன்னட சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: முதல்வர் விஜய்யா? சர்ச்சையாகும் புதிய பட டிரைலர்!

actor rishab shetty increses his salary. getting rs. 100 crore for kantara chapter 1 release on oct 2

96, மெய்யழகன் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்ய விருப்பம்: பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார் 96, மெய்யழகன் ஆகிய படங்களை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா: பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு!

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாயன்மார்கள் 63-இல் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையை விளக்க... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு ஒத்திவைப்பு! ஏன்?

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் குறித்த படமாக உருவான ஃப்ரீடம் திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்து... மேலும் பார்க்க

விம்பிள்டன் நாயகன்: ரோஜர் ஃபெடரரை முந்தி சாதனை படைத்த ஜோகோவிச்!

விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச் 14-ஆவது முறையாக அரையிறுதிக்குத் தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார். புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் 7 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தொடர்ந்து புதுப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள்.... மேலும் பார்க்க

வரலாற்று நாயகன்: ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய மெஸ்ஸி!

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38) அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். ... மேலும் பார்க்க