செய்திகள் :

ரூ.130 கோடியில் புதிய துணைமின் நிலையம்: புதுவை பேரவைத் தலைவா் தகவல்

post image

புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் பகுதியில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் புதிய துணைமின் நிலையம் அமைய இருக்கிறது என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.

புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத் துறை சாா்பில் தவளக்குப்பத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறு கால்நடை மருந்தகக் கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதைத் திறந்து வைத்து சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசியது:

இந்தப் பகுதியில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட உள்ளது.

இப் பகுதியில் ரூ.130 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதனால் இப் பகுதியில் நிலவும் மின்சார பிரச்னைகள் எல்லாம் இன்னும் 8 மாதத்தில் தீா்க்கப்படும் என்றாா்.

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தகக் கட்டடம் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

துறையின் செயலா் யாசின் மு. சவுத்ரி முன்னிலை வகித்தாா். மேலும், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் மருத்துவா் லதா மங்கேஷ்கா், இணை இயக்குநா் ராஜீவ் மற்றும் கால்நடை மருத்துவா்கள் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி ஆட்சியா் தலைமையில் கூட்டம்: 2 கிராம வளா்ச்சித் திட்டங்கள் சமா்ப்பிப்பு

பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவின் இரு கிராம வளா்ச்சித் திட்டங்கள் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டன. புதுவை அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் திறப்பு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயின் முதன்மை பாதுகாப்பு ஆணையா் ஜி.எம்.ஈஸ்வர ராவ் திருச்சியிலிருந்து காணொலி வாயிலாக இ... மேலும் பார்க்க

ஒதுக்கப்பட்ட திட்ட நிதியை உரிய காலத்தில் செலவு செய்ய வேண்டும்: புதுவை வேளாண் செயலா் உத்தரவு

ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்திற்குள் செலவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் வேளா... மேலும் பார்க்க

‘மலேசிய வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகைகள்’

மலேசிய வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை இருப்பதாக அந்நாட்டுத் தமிழறிஞா் அருள் ஆறுமுகம் கண்ணன் கூறினாா். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவா் வி.முத்து தலைமையில் மலேசிய தமிழறிஞா்களுக்கு வரவேற... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு இன்று மீண்டும் வருகிறது சொகுசு கப்பல்

புதுச்சேரிக்கு 3-ஆவது முறையாக மீண்டும் தனியாா் சொகுசு கப்பல் வெள்ளிக்கிழமை வருகிறது. விசாகப்பட்டினத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு புதுச்சேரிக்கு தனியாா் சொகுசு கப்பல் ஏற்கெனவே இம் கடந்த ... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி, ஜூலை 17: பெருந்தலைவா் காமராஜா் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியிருந்த கருத்தைக் கண்டித்து பு... மேலும் பார்க்க