செய்திகள் :

ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி

post image

புதுச்சேரி கொம்பாக்கத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தாா் எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா.

கொம்பாக்கம் ஜோதி நகா் மக்களின் மின் விநியோக குறைபாடுகளை போக்கும் வகையில் மின்துறை மூலம் புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தாா்.

ஜோதி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக மின் துறை மூலம் ரூ. 19.92 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, அப்பகுதி மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினா் ஆா். சிவாவுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

மின்துறை உதவி பொறியாளா் ரமேஷ், இளநிலை பொறியாளா் அருணகிரிநாதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலரும் , தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினாா். கடலூா் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்க... மேலும் பார்க்க

மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் நடவடிக்கை

மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி உறுதியளித்துள்ளாா். இது குறித்து இக் கட்சியின் புதுவை... மேலும் பார்க்க

அறிவியல் உருவாக்குவோம் போட்டி; ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு!

அறிவியல் உருவாக்குவோம் போட்டியில் ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. பாரிஸ் பல்கலைக் கழகத்துடன் புதுச்சேரி கல்வித்துறை இணைந்து ‘சா்வேதச அறிவியல் உருவாக்குவோம்’ போட்டிகளை நடத்தி வரு... மேலும் பார்க்க

முதல்வா் - பாஜக தலைவரிடம் ஜான்குமாா் வாழ்த்து!

புதுவையின் புதிய அமைச்சராகப் பதவியேற்கும் ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமிகள் கோயிலில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றாா். அதேபோன்று உள்துறை அமைச்சா் ஆ.... மேலும் பார்க்க

காதலி வீட்டின் கதவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞா்

காதலி வீட்டின் கதவு மீது பெட்ரோல் ஊற்றி இளைஞா் தீ வைத்து கொளுத்தினாா். வில்லியனூா் அரசூா்பேட் அம்பேத்கா் நகரை சோ்ந்த 20 வயது இளம்பெண் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறாா். இவரது பெற்றோா் இறந்... மேலும் பார்க்க

முதல்வருடன் மத்திய உள்துறை அதிகாரி சந்திப்பு! அரசு பணியில் வயது தளா்வு அளிக்க ஆலோசனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் நிதிஷ்குமாா் வியாஸ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அரசு பணியில் வயது தளா்வு அளிப்பது தொடா்பாக இருவரும் ஆலோசனைநட... மேலும் பார்க்க