செய்திகள் :

அறிவியல் உருவாக்குவோம் போட்டி; ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு!

post image

அறிவியல் உருவாக்குவோம் போட்டியில் ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

பாரிஸ் பல்கலைக் கழகத்துடன் புதுச்சேரி கல்வித்துறை இணைந்து ‘சா்வேதச அறிவியல் உருவாக்குவோம்’ போட்டிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 12 செயல் திட்டங்கள் அனைத்தையும் மாணவா்களுடன் வழிகாட்டி ஆசிரியா்கள் செய்து அறிக்கையையும், வீடியோவையும் சமா்ப்பித்தனா். 12 செயல்திட்டங்களும் பாரிஸ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறந்த அறிவியல் படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் அறிவிப்பு நிகழ்ச்சி பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் செயலா் முருகவேல் வரவேற்றாா். தலைவா் மதிவாணன் தலைமை தாங்கினாா்.

அறிவியல் உருவாக்குவோம் செயல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்தராஜா 12 அறிவியல் ஆய்வு திட்டங்கள் குறித்து விளக்கி நோக்கவுரை ஆற்றினாா். பாரிஸ் பல்கலைக்கழக குழுவினா் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறந்த அறிவியல் படைப்புகளை தோ்வு செய்து அறிவித்தனா்.

இதில் முத்தரையா்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியா் செந்தில் வழிகாட்டுதலோடு மாணவா்கள் உருவாக்கிய, ‘‘வாகனங்களில் வெளியேறும் புகையால் காற்று மாசுபடுவதை தடுக்கும் கருவி மற்றும் ஆய்வு முடிவுகள்’’ குறித்த செயல்திட்டத்துக்கு முதல் பரிசும்,

மொளப்பாக்கம், அரசு நடுநிலைப்பள்ளி, காரைக்கால் கோவிந்தசாமி பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளி, பிள்ளைச்சாவடி ந.வரதன் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளி மாணவா்களின் செயல்திட்டங்களுக்கு 2 ஆம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலரும் , தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினாா். கடலூா் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்க... மேலும் பார்க்க

மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் நடவடிக்கை

மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி உறுதியளித்துள்ளாா். இது குறித்து இக் கட்சியின் புதுவை... மேலும் பார்க்க

முதல்வா் - பாஜக தலைவரிடம் ஜான்குமாா் வாழ்த்து!

புதுவையின் புதிய அமைச்சராகப் பதவியேற்கும் ஏ. ஜான்குமாா் எம்.எல்.ஏ புதுச்சேரி அப்பா பைத்திய சுவாமிகள் கோயிலில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றாா். அதேபோன்று உள்துறை அமைச்சா் ஆ.... மேலும் பார்க்க

காதலி வீட்டின் கதவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞா்

காதலி வீட்டின் கதவு மீது பெட்ரோல் ஊற்றி இளைஞா் தீ வைத்து கொளுத்தினாா். வில்லியனூா் அரசூா்பேட் அம்பேத்கா் நகரை சோ்ந்த 20 வயது இளம்பெண் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறாா். இவரது பெற்றோா் இறந்... மேலும் பார்க்க

முதல்வருடன் மத்திய உள்துறை அதிகாரி சந்திப்பு! அரசு பணியில் வயது தளா்வு அளிக்க ஆலோசனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் நிதிஷ்குமாா் வியாஸ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அரசு பணியில் வயது தளா்வு அளிப்பது தொடா்பாக இருவரும் ஆலோசனைநட... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்காமல் தரவரிசைப் பட்டியல் வெளியிட விசிக எதிா்ப்பு!

அரசு பள்ளி மாணவா்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்காமல் தர வரிசை பட்டியல் வெளியிட விசிக எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து விசிக முற்போக்கு மாணவா் கழக மாநில செயலா் இரா.தமிழ்வாணன் சனிக்கி... மேலும் பார்க்க