செய்திகள் :

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

post image

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண்டு முழுவதும் ரூ.40 லட்சம் வரை, யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி ஒரு தெருவோர வியாபாரிக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, தெருவோர வியாபாரிகளுக்கு இதுபோன்ற வரியிலிருந்து விலக்கு வழங்குமாறும், இல்லாவிட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள தெருவோர வியாபாரிகள் பலரும், யுபிஐ மூலம் பணம் பெறுவதை நிறுத்திவிட்டு, கையில் ரொக்கமாகவே வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூர் வரித்துறை அலுவலகத்திலிருந்து ரூ.29 லட்சம் வரி செலுத்துமாறு காய்கறி வியாபாரி ஒருவருக்கு நோட்டீஸ் வந்திருப்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தி தெரிவிப்பது என்னவென்றால், காய்கறி மற்றும் பழங்களுக்கு ஜிஎஸ்டி விதிமுறை எதுவும் இல்லை. இதுவரை நான் ஜிஎஸ்டியில் பதிவும் செய்யவில்லை. ஆனால், ஆண்டு முழுவதும் ரூ.40 லட்சத்துக்கு வியாபாரம் செய்திருப்பதாகக் கூறி ரூ. 29 லட்சம் வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், இந்த பணம் முழுவதும் காய்கறி விற்பனையால் மட்டுமே வந்தது என நிரூபித்தால் நோட்டீஸ் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்திருக்கிறார்களாம்.

தெருவோர வியாபாரிகள் பலவிதமான அபராதங்கள் செலுத்துவதாகவும், வருவாயில் பெரும்பகுதி பொருள்கள் வாங்குவது போன்ற பல விதங்களில் செலவாவதாகவும், இதுபோன்ற பெரிய தொகைகளை தெருவோர வியாபாரிகள் எவ்வாறு செலுத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிறு வியாபாரிகளிடமிருந்து ஜிஎஸ்டி என்ற பெயரில் வரியைப் பிடுங்குவது நல்லதல்ல என்று மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் வியாபாரிகள் யுபிஐ பரிவர்த்தனையை நிறுத்திவிட்டு ரொக்கமாக வாங்குகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றவர்களுக்கு அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா ஆஜராகவில்லை

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு தொடா்பான அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் ராணா டகுபதி புதன்கிழமை ஆஜராகவில்லை. சட்டவிரோதமாக இணையத்தில் பந்தயம் கட்டி விளையாடுவதற்கான பல சூதாட்ட செயலிகள், முறைகேடான வழி... மேலும் பார்க்க

தில்லி அருகே ‘போலி தூதரகம்’ நடத்திய நபா் கைது

தேசிய தலைநகா் வலயமான காஜியாபாதில் இல்லாத நாடுகளின் பெயரில் போலியாக தூதரகம் நடத்தி வந்த ஹா்ஷ் வா்தன் ஜெயின் என்ற நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறித்து உத்தர பிர... மேலும் பார்க்க

‘இந்தியாவில் குறைந்துவரும் நுகா்வு சமத்துவமின்மை’

இந்தியாவில் நுகா்வு சமத்துவமின்மை குறைந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌமியா காந்தி கோஷ், எஸ்பிஐ பொருளாதார நிபுணா் ஃபல்குனி சின்ஹா ஆகியோா் தெரிவித்துள்ளனா். இது தொடா்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

நமது நிருபர்கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினார். இது தொடர்... மேலும் பார்க்க

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்

நமது சிறப்பு நிருபர்பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களுக்கு எதிராக தில்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நமது நிருபர்மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும், வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட உயிர்களுக்கும், பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க தேச... மேலும் பார்க்க