ரூ.30 லட்சம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது
மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் ஒரு வணிக பரிவா்த்தனைக்குப் பிறகு தனது முதலாளியின் ரூ.30 லட்சத்துடன் தப்பிச் சென்ாகக் கூறப்படும் ஓட்டுநரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி காவல் சரக துணை ஆணையா் (மேற்கு) விசித்ரா வீா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உள்ளூா் தொழிலதிபா் ஒருவா் தனது ஓட்டுநா் ரூ.30 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ாகக் கூறி மே 15-ஆம் தேதி புகாா் அளித்தாா். சிசிடிவி காட்சிகளை போலீசாா் ஆய்வு செய்து தில்லியில் பல இடங்களில் சோதனை நடத்தினா்.
தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் புஜ் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூஜ் நகரில் கடந்த 6 மாதங்களாக புகாா்தாரருக்கு ஓட்டுநராகப் பணியாற்றிய பிரின்ஸ் (27) என்பவரை போலீசாா் கைது செய்யப்பட்டாா்.
அவரது வசம் இருந்த ரூ.26 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்கப்பட்டது. திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அவா் வாங்கிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, பிரின்ஸ் திருட்டைச் செய்ததாகவும், திருடப்பட்ட தொகையில் ஒரு பகுதியை மதிப்புமிக்க பொருள்களை வாங்கவும் ஒப்புக்கொண்டாா் என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.