செய்திகள் :

`ரூ.5 லட்சம்' கொடுத்த பணத்தை கேட்டதற்காக வீட்டுக்கு தீ வைத்த உறவினர்.. பெங்களூருவில் நடந்த கொடுமை

post image

பெங்களூரு விவேக் நகரில் இரு குடும்பத்தினர் இடையே பணம் சம்பந்தமான தகராறில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகராறு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருவதாக கூறப்படுகிறது. வெங்கடரமணி மற்றும் அவரின் மகன் சதீஷ் ஆகியோருக்கு சொந்தமான வீட்டினை இவர்களின் உறவினரான சுப்பிரமணியன் என்பவர் தீவைத்து கொளுத்த முயன்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன.

money

பார்வதி என்பவர் தனது மகள் திருமணத்திற்காக வெங்கடரமணியிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பலமுறை கேட்டும் கடனை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இந்த பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது.

திருமண விழாவில் சந்தித்தபோது, வெங்கடரமணி பார்வதியிடம் வாங்கிய கடன் குறித்து கேட்டிருக்கிறார்.

பார்வதியிடம் பணத்தை கேட்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியிருக்கிறது. இதை தொடர்ந்து அவர்களை பழிவாங்க திட்டமிட்ட அந்த குடும்பத்தினர், உறவினரான சுப்பிரமணியன் என்பர், வெங்கடரமணி வீட்டில் தீ வைக்கச் சென்றிருக்கிறார்.

வீட்டின் வெளியில் இருக்கும் காலனி ஸ்டாண்ட், படுக்கையறை ஜன்னல் மீது சுப்பிரமணியன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்து விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், யாருக்கும் காயமோ, பெரிய அளவில் பாதிப்போ ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்த விவேக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவானதை கண்காணித்து, போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழியா... போலீஸ் விசாரணை!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் காரைக்காலுக்கு சென்றுள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள செ... மேலும் பார்க்க

`உங்கள் ஆட்சியிலாவது கந்துவட்டிக் கொடுமைக்கு...’ - விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கந்துவட்டிக் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலைபுதுச்சேரி கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான விக்ரம், இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு மினி லாரி ஒன்றை வாங்கிய விக்ரம... மேலும் பார்க்க

கடலூர்: `காதலன் கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்!’ - கணவருக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண் காவலர்

கடலூரைச் சேர்ந்த சோனியா சென்னை ஆவடி ஆயுதப் படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கும், அங்கு கார் ஓட்டுநராகப் பணியாற்றிய கடலூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக ம... மேலும் பார்க்க

திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு: தலைமறைவான மாமியார் சித்ராதேவி கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

``மேகாலயா சம்பவத்தை போல செய்தேன்..'' - திருமணமாகி 45 நாளில் கணவனை கொன்ற பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

மேகாலயாவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவரை அவரது மனைவி தேனிலவுக்கு அழைத்துச் சென்று கூலிப்படையை ஏவி படுகொலை செய்த சம்பவத்தை போன்று பீகாரில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேகாலயா சம்பவத... மேலும் பார்க்க

சென்னை: காலையில் திருமணம் மாலையில் மாயம்; மணமகளைத் தேடும் குடும்பம்; என்ன நடந்தது?

சென்னை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகவள்ளி. இவர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் 2.7.2025-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, "என் கணவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். என்னுடைய மகள் அர்ச்... மேலும் பார்க்க