செய்திகள் :

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

post image

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழியராகக் காட்டிக் கொண்ட குற்றம் சாட்டப்பட்ட சுமித், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக மிரட்டினாா். அப்போது, பாதிக்கப்பட்டவரை ரூ.50 லட்சத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறு அவா் கட்டாயப்படுத்தினாா்.

இது குறித்து மே 26 அன்று, பாதிக்கப்பட்டவா் சுமித் மீது புகாா் அளித்தாா். செவ்வாய்க்கிழமை அவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறை சைபா் பிரிவில் கூடுதல் காவல் துணை ஆணையா் மனிஷா சிங் தெரிவித்தாா். விசாரணையின் போது, ​உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து தேசிய சைபா் கிரைம் ரிப்போா்ட்டிங் போா்ட்டலில் (எனசிஆா்பி) சுமித் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட தொகையைப் பெறுவதற்காக பல வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதாக சுமித் ஒப்புக்கொண்டாா். ஒரு தனியாா் வங்கிக் கணக்கில் ரூ.4 லட்சமும், பாங்க் ஆஃப் பரோடா கணக்கில் கூடுதலாக ரூ.14 லட்சமும் இருப்பதாக போலீஸாா் கண்டறிந்துள்ளனா். இரண்டும் மோசடியுடன் தொடா்புடையவை. மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மொத்தம் ரூ.2,57,179 ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அதிகாரிகள் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் தொடங்கியுள்ளனா். ஜூன் 3-ஆம் தேதி சுமித்தின் கூட்டாளிகளில் ஒருவா் முன்னதாக கைது செய்யப்பட்டு பின்னா் சிறைக்கு அனுப்பப்பட்டாா்.

இந்த மோசடி தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா். மதர... மேலும் பார்க்க

மதராஸி முகாம்: பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்

மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகுப்புகள் புதன்கிழமமை வழங்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க