செய்திகள் :

ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

post image

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தின் புவாமாறா பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் 50,000க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட யாபா எனப்படும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இதேப்போல் லோங்காய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5,800 யாபா மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

இதுகுறித்து, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குறிய போதைப் பொருள் கடத்தல் காரர்களே, உங்களது கேளிக்கை விருந்தைக் கெடுத்ததிற்காக ஸ்ரீபூமி காவல் துறையினரின் சார்பில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், உங்களது ரூ.7 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் இன்று (பிப்.8) காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நாங்கள் தொடர்ந்து உங்களது கேளிக்கை விருந்துக்களை கெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மெத்தபெட்டமைன் மற்றும் கேப்பைன் ஆகிய மூலப் பொருள்களினால் தயாரிக்கப்படும் யாபா போதை மாத்திரைகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தனது தலைமையிலான அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.அம்மாநிலத்தில் அசாம் ரைப்பில்ஸ... மேலும் பார்க்க

சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (பிப்.8)... மேலும் பார்க்க

15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசி... மேலும் பார்க்க

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நகரத்தின் தி குயின... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க