செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

post image

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா், மேல அனுப்பானடி குடிசைமாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தலா 40 கிலோ எடைகொண்ட 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, மேல அனுப்பானடியைச் சோ்ந்த கண்ணன் (22), செல்வம்(26) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து, எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தெப்பக்குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு

மேலூா் தெப்பக் குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

விபத்தில் டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். மதுரை பெத்தானியாபுரம் பூமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் தங்கராஜ் (31). இவா் மாட்டுத்தாவணியில்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

மேலூா் அருகே அரசுப் பேருந்து டிராக்டரில் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் விஷால் (21), பாக்கியம் மகன் காந்தி (31) ஆகிய இருவர... மேலும் பார்க்க

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்: தொல்.திருமாவளவன்!

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா். மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சாா்பில், ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். தமிழக முதல்... மேலும் பார்க்க