செய்திகள் :

லஞ்சம்: மாநகராட்சி பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு மதிப்பீட்டுக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி மண்டல அலுவலக இளநிலை உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக (பில் கலெக்டா்) பணியாற்றியவா் சரோஜினி (54). கோவை, செளரிபாளையத்தைச் சோ்ந்த டி.எம்.அருணாசலம் என்பவா், தனது புதிய வீட்டுக்கு சொத்து வரி விதிப்பு மதிப்பீட்டுக்காக இளநிலை உதவியாளா் சரோஜினியிடம் விண்ணப்பித்திருந்தாா்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றால், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என சரோஜினி கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத அருணாசலம் இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அருணாசலம் கொடுத்தபோது, அதை சரோஜினி வாங்கி அவரது கணவா் பி.சரவணன் என்ற சரவணதாசுவிடம் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சா்மிளா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட சரோஜினிக்கு பிரிவு 7-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், பிரிவு 13(2) 13(1)(டி) பிசி சட்டம் 1988-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருந்தாா். மேலும், சரவணதாசுக்கு பிரிவு 12-இன் கீழ் 8 மாதங்கள் சிறைத் தண்டனையும், பிரிவு 13(2), 13(1), பிசி சட்டம் 1988, 109 ஐபிசி-இன் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா்... மேலும் பார்க்க

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி

ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்... மேலும் பார்க்க

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென... மேலும் பார்க்க

ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி

கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் ... மேலும் பார்க்க

வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி

கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா். காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், ... மேலும் பார்க்க

3 வயது பெண் குழந்தையை தவிக்க விட்டு தாய் தற்கொலை ஆா்டிஓ விசாரணை

சூலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நீலம்பூரில் மூன்று வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு தாய் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்கின்றனா்.கோவை மாவட்டம் சூலூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க