செய்திகள் :

லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி அதிகாரி கைது

post image

நொய்டாவைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.45,000 லஞ்சம் வாங்கிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரி திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொழிலதிபா் பிரமோத் திவாரியை தொடா்பு கொண்ட கொண்ட பூதேவ் என்ற நபா், கடந்த 2016-17 மற்றும் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு ரூ.4.55 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் நிலுவை தொகை செலுத்தவில்லை என்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளாா்.

இந்நிலையில், ஜிஎஸ்டி அதிகாரி சதேந்திர பகதூரை கடந்த மே 13-ஆம் தேதி திவாரி சந்தித்துள்ளாா். அப்போது, ரூ.50,000 வழங்கினால், வழக்கை முடித்துவைப்பதாக பதூா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, திவாரி ஊழல் கண்காணிப்புத் துறையில் புகாா்அளித்தாா். அதனடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு நிராகரிப்பு!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.தில்லி உயா்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க

வக்ஃப் என்பது அத்தியாவசிய மத நடைமுறை அல்ல: மத்திய அரசு வாதம்

புது தில்லி: வக்ஃப் என்பது ஒரு அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.பல நாடுகளில் வக்ஃப் என்ற ஒரு கருத்தாக்கமே இல்லை. மாறாக அறக்கட்டளைக... மேலும் பார்க்க

ஹரியாணா பேராசிரியர் கைது: டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஹரியாணா பேராசிரியர் அலி கான் முகமது கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க ஹரியாணா ... மேலும் பார்க்க

கொல்கத்தா வானில் பறந்த உளவாளி ட்ரோன்கள்?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் வானில் ட்ரோன்கள் போன்ற சாதனங்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின், ஹேஸ்டிங்க்ஸ், வித்யாசாகர் சேது மற்றும் மைதான் ஆகிய பகுதிகளின் வான... மேலும் பார்க்க

கொலையா செய்துவிட்டார்? பூஜா கேத்கருக்கு முன் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன் பிணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் கொலையா செய்துவிட்டார்? என்று கேள்வி எழுப்பியதோடு, முன்னாள் ஐஏஎஸ் பயி... மேலும் பார்க்க

மின் வாகனங்களில் புதிய புரட்சி! ஓலா ரோட்ஸ்டெர்: மே 23 முதல் விற்பனையில்..!

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் (OlaRoadster X) எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை குறித்த விவரங்களை ஓலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எலக்ட்ரிக் பைக் தயார... மேலும் பார்க்க