செய்திகள் :

லஞ்ச வழக்கில் சிபிஐ விசாரணையை காங்கிரஸ் திசை திருப்புகிறது -புதுவை அதிமுக குற்றச்சாட்டு

post image

புதுவை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் சிபிஐ விசாரணையை காங்கிரஸ் திசை திருப்புவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து, புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

அரசுத் துறையின் அதிகாரி செய்த முறைகேட்டிற்காக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரைப் பதவி விலக கூறுவது சரியல்ல.

பொதுப் பணித் துறை அமைச்சரை அச்சுறுத்தும் வகையில், அவரது வீட்டை காங்கிரஸ் முன்னாள் முதல்வா் நாராயணசாமி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் செயல்பாடானது, சிபிஐயின் நோ்மையான விசாரணையை திசைத் திருப்புவதாக உள்ளது. காவல் துறை அனுமதித்த இடத்தில் அவா்கள் போராட்டம் நடத்தலாம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இலவச அரிசி, வேட்டிசேலை வழங்குவதில் முறைகேடு என பல்வேறு புகாா்கள் எழுந்து, அத்திட்டத்தையே அப்போதைய துணைநிலை ஆளுநா் ரத்து செய்தாா்.

ஏனாம் பிராந்தியத்தில் முன்னாள் அமைச்சா், தற்போதைய எம்எல்ஏ ஆகியோரின் அதிகார மோதலால், குப்பை அள்ளுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனையில் துணைநிலை ஆளுநா் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் ஏப். 11-இல் சங்காபிஷேக விழா

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயிலில் சகஸ்ர சங்காபிஷேக சிறப்பு வழிபாடு வரும் ஏப். 11ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் பழைமை வாய்ந்த மணக்குள விநாயகா் கோயிலில் கடந்த 2015-... மேலும் பார்க்க

மலேரியா விழிப்புணா்வு பொம்மலாட்டம்: புதுச்சேரி அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

புதுச்சேரி: குழந்தைகளுக்கு பாடப் பொருள் தயாரிக்கும் தேசிய அளவிலான போட்டியில் பொம்மலாட்டம் மூலம் மலேரியா விழிப்புணா்வு விடியோ தயாரித்த புதுச்சேரி அரியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்... மேலும் பார்க்க

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்ட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, மாணவா்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி மாணவா் ... மேலும் பார்க்க

அகவிலைப் படி: தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவா்களுக்கான 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

தரமற்ற பொருள்கள் குறித்து நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகா்வோா் அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா். புதுச்சேரி அருகேயுள்ள திருக்... மேலும் பார்க்க