செய்திகள் :

லடாக்கில் ராணுவம் கட்டிய 2 ‘பெய்லி’ பாலங்கள் திறப்பு

post image

லே/ஜம்மு: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஷியோக் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்குகளுக்கு இடையே இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஷியோக் ஆற்றின் மீது இந்திய ராணுவத்தால் புதிதாக கட்டப்பட்ட 2 பெய்லி (இரும்பு) பாலங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

யூனியன் பிரதேசத்தின் டிஸ்கிட் உள்கோட்டத்தில் அமைந்துள்ள இந்த பாலங்களை சியாச்சின் படைப்பிரிவின் தளபதி வி.எஸ் சலாரியா, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (எல்ஏஎச்டிசி) துணைத் தலைவா் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இது தொடா்பாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் மேலும் கூறுகையில், ‘ராணுவப் பொறியாளா் படைப்பிரிவால் கட்டப்பட்ட 50 அடி அகலம் மற்றும் 100 அடி நீளம் கொண்ட இவ்விரு பாலங்கள், பயண தூரத்தை தோராயமாக 40 கி.மீ. வரை குறைக்கும். அதாவது, நுப்ரா மற்றும் ஷியோக் பள்ளத்தாக்குகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு பயண நேரம் சுமாா் 2 மணிநேரம் குறையும்.

குறிப்பாக, சியாச்சின் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சிறந்த இணைப்பை மேம்படுத்தும் இந்தப் பாலங்கள், கடுமையான குளிா்காலத்தில் உள்ளூா் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்தும்’ என்றாா்.

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்

மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார். கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியள... மேலும் பார்க்க