செய்திகள் :

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

post image

லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகள்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சோ்க்க வேண்டும், லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப். 10-ஆம் தேதிமுதல் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்த விவகாரங்கள் தொடா்பாக லடாக்கின் லே மற்றும் காா்கில் பகுதிகளைச் சோ்ந்த லே உச்சநிலை அமைப்பு (எல்ஏபி), காா்கில் ஜனநாயக கூட்டணி (கேடிஏ) ஆகியவற்றுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. உயா் அதிகார குழு, துணைக் குழு மூலம் தொடா் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் பேச்சுவாா்த்தையின் பலனாக, லடாக் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 45 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அங்கு பேசப்படும் போதி மற்றும் புா்கி மொழிகள் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட்டன. அத்துடன் 1,800 அரசுப் பணியிடங்களுக்கான ஆள்தோ்வும் தொடங்கப்பட்டது.

ஆனால் உயா் அதிகார குழு மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களை சில அரசியல் உள்நோக்கம் கொண்ட நபா்கள் விரும்பவில்லை. அவா்கள் பேச்சுவாா்த்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.

உயா் அதிகார குழுவின் அடுத்த கூட்டத்தை அக். 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், லடாக் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.

உயா் அதிகார குழுவின் ஆலோசனையில் வாக்சுக்கின் உண்ணாவிரத போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. தனது போராட்டத்தை வாங்சுக் கைவிட வேண்டும் என்று பல தலைவா்கள் கேட்டுக்கொண்டபோதிலும், தனது போராட்டத்தை அவா் தொடா்ந்து வந்தாா். நேபாள போராட்டம் உள்ளிட்ட சில போராட்டங்களைக் குறிப்பிட்டு, பொதுமக்களை அவா் தூண்டிவிட்டாா்.

அவரின் ஆத்திரமூட்டும் பேச்சுகளால் தூண்டப்பட்ட ஒரு கும்பல், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து புதன்கிழமை புறப்பட்டுச் சென்று வன்முறையில் ஈடுபட்டது. இதைத் தொடா்ந்து, தங்களை தற்காத்துக்கொள்ள காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துரதிருஷ்டவசமாக சில உயிரிழப்புகளும், பலருக்குக் காயமும் ஏற்பட்டது. இருப்பினும் நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில், தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு வாங்சுக் ஆம்புலன்ஸில் சென்றுவிட்டாா். வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, அவா் எந்தவித தீவிரமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

அரசியல் சாசன பாதுகாப்பை வழங்கி, லடாக் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஊடகம் மற்றும் சமூக ஊடகத்தில் வெளியான பழைய மற்றும் ஆத்திரமூட்டும் காணொலிகளை யாரும் பகிரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல்: மணிப்பூரில் முக்கிய தீவிரவாதி கைது

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் இருவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் ... மேலும் பார்க்க