செய்திகள் :

``லண்டன் சென்றபோது இந்தி பேசினாரா, ஆங்கிலம் பேசினாரா?'' - அண்ணாமலையை சாடும் செந்தில் பாலாஜி

post image

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை நகர தி.மு.க சார்பில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க கரூர் மாவட்ட செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை ஏற்று பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,

"தமிழ்நாட்டின் அரசியல் கோமாளி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் அவர் லண்டனுக்கு படிப்பிற்காக சென்றபோது இந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, இரவு ஒரு பேச்சு என்று பேசுவதோடு, அப்படி தான் பேசிய பேச்சினை கூட அடுத்த நாள் மறந்து பேசக் கூடியவர். தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஆனால், தான் கூறிய திட்டம் ஒன்று அதை செயல்படுத்துவது ஒன்று என்று மாறி மாறி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்திய நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் பா.ஜ.க அரசு.

dmk public meeting

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றினை காப்பி அடித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக கூறி மக்களிடம் வாக்குகளை பெறுகிறார்கள். இந்தியா மட்டுமல்ல, உலகத்திற்கே பல்வேறு திட்டங்களை எடுத்துக்காட்டாக செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்" என்றார்.

அதனைத்தொடர்ந்து, தலைமை செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசுகையில்,

"பி.ஜே.பி அரசு மறைமுகமாக விஸ்வகர்மா என்ற குலத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையை தயாரிக்கிறது. கல்வி நிதியாக அளிக்க வேண்டிய தொகையை பிரதமர் அப்பா வீட்டின் பணத்தினையோ, நிர்மலா சீதாராமனின் மாமனார் வீட்டின் பணத்தினையும், தர்மேந்திர பிரதானின் வீட்டின் பணத்தினையும் கேட்கவில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவரும் செலுத்திய ஜி.எஸ்.டி வரியை உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு உருப்படாத உத்திரபிரதேச மாநிலத்திற்கு அதிக தொகையை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களிடம் எங்களது உரிமையை தான் கேட்கிறோம். தமிழன் என்றும் உங்களிடம் பிச்சை கேட்க மாட்டான்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க

Parliament: பதாகைகளை ஏந்தி எதிக்கட்சிகள் கடும் அமளி; மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வார விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. மக்களவையிலும் - மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவையில், தொகுதி மறு சீர... மேலும் பார்க்க

மதுரை: ``இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்'' - த.வா.க வேல்முருகன் சொல்வது என்ன?

நாம் தமிழர் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய வெற்றிக்குமரன் தன்னுடைய அமைப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.அதில் கலந்துகொள்ள வந்திருந்... மேலும் பார்க்க

Kerala BJP: கேரள பாஜக தலைவராகும் ராஜீவ் சந்திரசேகர்; கர்நாடகா டு கேரள அரசியல் என்ட்ரி! - யார் இவர்?

கேரள மாநில பா.ஜ.க தலைவராக இருக்கும் கே.சுரேந்திரனின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் பதவிக்காக மாநில நிர்வாகிகள் எம்.டி.ரமேஷ், ஷோபா சு... மேலும் பார்க்க

``டிரம்ப் கொடுத்த நெருக்கடி'' - பதவியேற்றதும் நாடாளுமன்றத்தை கலைப்பது ஏன்? கனடா பிரதமர் விளக்கம்!

ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பின், கனடா பிரதமராக மார்க் கார்னே பதவியேற்று கிட்டதட்ட 10 நாள்கள் தான் ஆகியுள்ளது. அதற்குள், அவர் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார்.கன... மேலும் பார்க்க

Nitish Kumar: நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தை முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தது ஏன்?

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2024-ஐ ஆதரித்ததற்காக, பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் நடத்திய இப்தர் நிகழ்வை முக்கிய முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்திருக்கின்றன. மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆ... மேலும் பார்க்க