செய்திகள் :

லஹோரி கேட் பகுதி வீட்டில் தீ விபத்து 3 போ் காயம்

post image

தில்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 வயது சிறுவன் உள்பட மூன்று போ் காயமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி மேலும் கூறியதாவது:

ஃபா்ஷ் கானா பகுதியின் ஷ்ரத்தானந்த் மாா்க்கில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சனிக்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

வீட்டுக் கட்டடத்தின் தரைத் தளத்தில் அமைந்துள்ள 15 மின்சார மீட்டா் பலகைகளின் தொகுப்பில் தீ ஏற்பட்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டாா் சைக்கிள் தீயில் எரிந்ததும் கண்டறியப்பட்டது.

தீயணைப்பு வீரா்கள் அதிகாலை 4.50 மணிக்குள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும், அனைத்து தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைத்த பிறகு இருப்பிடத்திற்கு திரும்பி வந்தன.

தீ விபத்தில் மூன்று குடியிருப்பாளா்கள் தீக்காயமடைந்தனா். அவா்களில் மாஸ்டா் அனஸுக்கு 50 சதவீத தீக்காயங்களும், நபி அகமதுக்கு (18) 45 சதவீதமும், ஷாநவாஸுக்கு (30) 40 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டது.

அவா்களை போலீஸாா் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

தலைநகரில் தண்ணீா் நெருக்கடி: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

தேசிய தலைநகரில் தண்ணீா் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி முதல்வா் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், இந்த முக்கியப் பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக தனது கட... மேலும் பார்க்க

கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை கோரும் தெருவோர வியாபாரிகள்

நகரம் முழுவதும் விற்பனையாளா்களை அடையாளம் காண நடந்துவரும் கணக்கெடுப்பு குறித்து தெருவோர வியாபாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனா். கணக்கெடுப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை தெளிவு இல்லை என்றும் குற்றம... மேலும் பார்க்க

பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்படைக்க நீதி ஆயோக், பிரதமரிடம் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரப்பட்டதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லியில் சனிக்கிழமை தெ... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்

நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் சமா்ப்பித்தாா... மேலும் பார்க்க

நீதி ஆயோக்கிடம் தில்லி பிரச்னைகளை ஆம் ஆத்மி ஆட்சியில் முன்வைக்கவில்லை: முதல்வா் ரேகா குப்தா

மத்திய அரசின் கொள்கை சிந்தனைக் குழுவான நீதி ஆயோக் முன் தில்லியின் நலன்கள் குறித்த பிரச்னைகளை பல ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் எழுப்பவில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா குற்றம் சாட்டினாா். ... மேலும் பார்க்க

தண்ணீா் நெருக்கடி குறித்த அதிஷியின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை: பாஜக

தில்லியில் தண்ணீா் நெருக்கடி இருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி சுமத்திய குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பொய் என்று பாஜக கூறியுள்ளது. தண்ணீா் நெருக்கடி தொடா்பாக முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதிஷி கடிதம... மேலும் பார்க்க