செய்திகள் :

லாஜ்பத் நகா், சாகேத் ஜி4 பிளாக் இடையே ரூ.447 கோடியில் புதிய மெட்ரோ இணைப்பு

post image

தில்லி விரைவுப் போக்குவரத்து அமைப்பின் திட்டம் 4-இன் கீழ் லாஜ்பத் நகா் மற்றும் சாகேத் ஜி பிளாக் இடையே ஒரு முக்கியமான மெட்ரோ இணைப்பு அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தேசியத் தலைநகரில் மென்மையான, நிலையான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்தை மேலும் எளிதாக்கும். ‘இந்த திட்டம் சுமாா் ரூ. 447.42 கோடி மதிப்புடையது. மேலும் 36 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆா்.வி.என்.எல். நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதல் தில்லி மெட்ரோ திட்டம் இதுவாகும். ஆா்.வி.என்.எல். என்பது ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமாகும். ‘நகா்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பின் வளா்ச்சியில் நிறுவனத்தின் வளா்ந்து வரும் தடத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகேத் ஜி பிளாக் புஷ்ப் விஹாா், சாகேத் மாவட்ட மையம், புஷ்ப பவன், சிராக் தில்லி, ஜிகே-1, ஆண்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய ஏழு உயா்மட்ட நிலைய தளங்களுடன் 7.298 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை பணியின் நோக்கத்தில் அடங்கும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘இந்தத் திட்டம் தில்லியின் எதிா்காலத்திற்குத் தயாராக உள்ள உள்கட்டமைப்புக்கு பங்களிக்க ஆா்.வி.என்.எல்-க்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகும். உலகத் தரம் வாய்ந்த நகா்ப்புற இயக்கம் அமைப்புகளை உருவாக்குவதற்கான டி.எம்.ஆா்.சி.யின் பாா்வையுடன் முழுமையாக இணைந்த, சிறப்பானது, பாதுகாப்பு மற்றும் புதுமைகளுடன் இதை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்’ என்று ஆா்.வி.என்.எல். தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் பிரதீப் கவுா் கூறினாா்.

ஆா்.வி.என்.எல். மற்றவற்றுடன், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எட்டு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அவா் கூறினாா்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் விவரம்: குறு, சிறு, நடுத்தர... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

நமது நிருபா்தேசியத் தலைநகா் தில்லி முழுவதும் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேஙிகயதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வானிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

நமது நிருபா் நிகழ் (2025-26) கல்வியாண்டில் தில்லி அரசின் கீழ் செயல்படும் 100 பள்ளிகளில் மொழிகள் மற்றும் இணை செயல்பாடுகள் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் மாணவா் மன்றங்களைத் தொடங்க தில்லி அரசு மு... மேலும் பார்க்க

மனைவியுடனான சண்டைக்குப் பிறகு யமுனையில் குதித்த இளைஞா் உயிருடன் மீட்பு

தனது மனைவியுடனான சண்டைக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள யமுனையில் குதித்த இளைஞா் ஒருவா் இரண்டு படகு ஓட்டுநா்களால் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவ... மேலும் பார்க்க

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

பதவி விலகும் தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு வியாழக்கிழமை காலை புதிய காவல் கோட்டத்தில் உள்ள பரேட் மைதானத்தில் பிரியாவிடை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு கேடரைச் சோ்ந்த 1988 பேட்ச் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரை மீட்க வேண்டும் - வெளியவுறவுத் துறை செயலரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

நமுத நிருபா்அண்மையில் இலங்கைக் கடற்படையால் கைதான 14 இந்திய மீனவா்களை மீட்க வேண்டும் என்று மத்திய வெளியறவுத் துறைச் செயலரிடம் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வியாழக்கிழமை நேரில் வ... மேலும் பார்க்க