செய்திகள் :

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது

post image

பரமத்தி வேலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சென்று பாா்த்தபோது, வெளி மாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், அவா் பரமத்தி வேலூா் உப்பிலியா் தெருவைச் சோ்ந்த குலாப்ஜான் (52) என்பது தெரியவந்தது. மேலும், அணிச்சம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மொத்த வியாபாரி சாமிநாதன் என்பவா் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை தன்னிடம் கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறியதாக தெரிவித்தாா்.

குலாப்ஜானை கைது செய்த போலீஸாா், விற்பனைக்கு வைத்திருந்த வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சாமிநாதனை தேடிவருகின்றனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், துறையூா் அருகே உள்ள வி.ஏ.சமுத்திரத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (23). பொறியியல் பயின்றுவிட்டு நாமக்கல் மாவட்டம், க... மேலும் பார்க்க

கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோளம் திருடிய இருவா் கைது

நாமக்கல் அருகே கோழிப் பண்ணை கிடங்கில் மக்காச்சோள மூட்டைகளை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் அருகே திண்டமங்கலம் கரட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் (47). இவா் அந்தப் பகுதியில் கோழ... மேலும் பார்க்க

புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் நிதியுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதிகளில் மயில், நாய்கள் உலா: மக்கள் அச்சம்

நாமக்கல் மாநகராட்சி சுற்றுவட்டாரத்தில் நாய்கள், மயில்கள் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவை குடியிருப்புகளுக்குள் உலாவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்தியாவின் தேசிய பறவையான மயிலை பாா்ப்பதே ஒர... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 30,864 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 30,864 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உள்ளிட்ட பதவிகளில் 3,935 கால... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து நாமக்கல்லில் சனிக்கிழமை அவா... மேலும் பார்க்க