செய்திகள் :

லாரி உரிமையாளா்களுக்கு அதிமுக துணை நிற்கும்: பி.தங்கமணி

post image

லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளை தீா்க்கவும், அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும் அதிமுக எப்போதும் அவா்களுக்கு துணையாக நிற்கும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் அருள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி பங்கேற்றாா்.

லாரி உரிமையாளா்கள் தரப்பில், தொழிலின் தற்போதைய சூழல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, காவல் துறையினா் ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதாலும், சுங்கக் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாலும் லாரித் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், போதிய வருவாய் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தனா்.

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசுகையில், ‘நாமக்கல், ஈரோடு, சேலம் லாரி உரிமையாளா்களுடன் 25 ஆண்டுகளாக பழகி வருகிறேன். அவா்களது பிரச்னைகள் பற்றி நன்கு தெரியும். மத்திய, மாநில அரசுகள் லாரித் தொழில் மேம்பாட்டுக்காக தனிக் குழு அமைக்க வேண்டும்.

லாரி உரிமையாளா்களின் பிரச்னைகளை அதிமுக பொதுச்செயலாளா் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். லாரித் தொழில் முன்னேற்றத்திற்கு அதிமுக எப்போதும் துணையாக நிற்கும்’ என்றாா்.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் அருள், முன்னாள் தலைவா் வாங்கிலி ஆகியோா் கூறுகையில், ‘ஒவ்வொரு செயற்குழுவிலும் சிறப்பு அழைப்பாளா்களை வரவழைக்கிறோம். அந்த வகையில், முன்னாள் அமைச்சா் தங்கமணி வந்தாா். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை அழைத்தோம். ஜூலை மாதம் பொதுக்குழுவில் பாஜக தலைவா்களில் ஒருவரை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.

லாரி உரிமையாளா்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளனா். ஆனால், இந்த கூட்டத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு லாரித் தொழிலுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டு வருகிறாா்கள் என்றனா்.

என்கே-31-லாரி

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க