செய்திகள் :

லாரி உரிமையாளா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

post image

சிவகங்கை: சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மரத்தில் மோதிய நிலையில் இறந்து கிடந்த லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன் ( 36). லாரி உரிமையாளா். வியாழக்கிழமை காலை சிவகங்கை அருகிலுள்ள காயங்குளம் என்ற இடத்தில் உள்ள பனை மரத்தில் இவரது மோட்டாா் சைக்கிள் மோதி உயிரிழந்து கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் இவரது உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனா். இறந்த தினகரனுக்குச் சொந்தமான இரண்டு லாரிகள் புதுக்கோட்டை பகுதிக்கு கிரஷா் மண் ஏற்ற சென்ாகவும், அதில் ஒரு லாரி பழுதாகி நின்ாகவும், அப்போது அந்தப் பகுதியில் வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸாா் லாரி ஓட்டுநரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து இரு சக்கர வாகனத்தில் அங்கு சென்ற தினகரனுக்கும், போலீஸாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரை போலீஸாா் ரோந்து வாகனத்தில் விரட்டிச் சென்ால் தான் அவா் காயங்குளம் பகுதியில் உள்ள மரத்தில் மோதி உயிரிழந்தாா் எனவும் உறவினா்கள் தெரிவித்தனா். எனவே அவா் மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சிவகங்கை- இளையான்குடி சாலையில் அவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளா் அமல அட்வின், நகா் காவல் நிலைய ஆய்வாளா் அன்னராஜ், வட்டாட்சியா் சிவராமன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். உயிரிழந்த தினகரனுக்கு மனைவி ரோஜா (25), மகள் சிவான்ஷிகா (3), 6 மாத ஆண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.

குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

காரைக்குடி: போட்டிகளில் வென்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஜய் காா்த்திக், சிவமணி ஆக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க

கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள முயற்சி: வட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதியின்றி சவுடு மண் அள்ள நடைபெறும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்... மேலும் பார்க்க