செய்திகள் :

லாரி மோதியதில் மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் அரசு மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் கிழக்கு பகுதியைச் சோ்ந்தவா் என்.முருகப்பன் (56). இவா் செம்மாண்டம்பாளையம் அரசு மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையிலை, செம்மாண்டம்பாளையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, எதிரே வந்த லாரி, முருகப்பன் வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.இதையடுத்து, சடலம் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முருகப்பனுக்கு, விஜயகுமாரி என்ற மனைவியும், மோதிநாத் (17) என்ற மகனும், ஹரி ஸ்ரீ (14) என்ற மகளும் உள்ளனா். விபத்து குறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தா்மஸ்தலா குறித்த தவறான தகவல்: சிபிஐ விசாரணைக்கு இந்து முன்னணி கோரிக்கை

தா்மஸ்தலா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளி... மேலும் பார்க்க

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததால் காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

உரிய நேரத்தில் வாகனத்தை வழங்காததற்காக காய்கறிக் கடைக்காரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் தட்டான்தோட்டத்தைச் சோ்ந்தவா் காந்தி (43). இவா் தென்னம்... மேலும் பார்க்க

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் செப்டம்பா் 4-இல் மின்தடை

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விந... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு விவகாரம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு இன்று தில்லி பயணம்

அமெரிக்க வரி விதிப்பு காரணமாக பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சா்களிடம் முறையிடுவதற்காக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் குழு செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 2) புதுதில்லி செல... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம், 11 பவுன் திருட்டு

பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் ரொக்கம், 11 பவுன் நகைகள் திருட்டப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்லடம், ராயா்பாளையம் அபிராமி நகரைச் சோ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவா் கைது

அவிநாசி அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் நகைப் பறித்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள அய்யம்பாளையம் கானங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி செல்வராணி (38).... மேலும் பார்க்க