செய்திகள் :

லூவ்ரே: உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் மூடல்- என்ன காரணம் தெரியுமா?

post image

உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத்தலமாக லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இப்படி இருக்கையில் இந்த அருங்காட்சியம் திடீரென மூடப்பட்டிருக்கிறது.

இது குறித்து அறியாத சுற்றுலா பயணிகள், அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் காத்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும் லூவ்ரே எதற்காக மூடப்பட்டது. இதற்கான பின்னணி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள லூவ்ரே கலை மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை பாதுகாக்கும் அருங்காட்சியமாகும்.

இந்த அருங்காட்சியகம் உலகில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. லூவ்ரே அருங்காட்சியத்தில் மோனாலிசா போன்ற புகழ்பெற்ற ஓவியங்கள், கிரேக்க, ரோமானிய கலைப் பொருள்கள் மற்றும் பிற அரிய கலை படைப்புகள் இங்கு உள்ளன. இவற்றைக் காண உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் இங்கு குவிகின்றனர்.

இந்த நிலையில் இந்த அருங்காட்சியகத்தின் ஊழியர்கள் கட்டுக்கடங்காத கூட்டம், பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் பல ஆண்டுகளாக மோசம் அடைந்து வரும் நிலைமை குறித்து எச்சரித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு 8.7 மில்லியன் பார்வையாளர்களை கண்டுள்ளது லூவ்ரே அருங்காட்சியகம்.

ஆனால் கூட்ட நெரிசல், மோசமான பணி நிலைமைகள் காரணமாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த அருங்காட்சியம் தற்போது மூடப்பட்டுள்ளது..

உள்கூட்டத்தின் போதே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கேலரி ஊரியர்கள் தங்களது கடமைகளை ஏற்க மறுத்திருக்கின்றனர்.

இதனை அறியாத ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அந்த சுற்றுலா தலத்தின் முன்பு காத்திருக்கின்றனர்.

அங்கு இருக்கும் ஊழியர்கள் ஆறு வருடங்களாக இதற்காக காத்திருப்பதாகவும் ”இது கலையைப் பற்றியது மட்டுமல்ல அதனை பாதுகாக்கும் மக்களைப் பற்றியது” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

அருங்காட்சியதை புதுப்பிக்கும் திட்டத்தை ஏற்கனவே பிரெஞ்சு ஜனாதிபதி அறிவித்திருந்தார். "கடந்த 10 ஆண்டுகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆனால் அதற்கான நிதி குறைந்து விட்டதாக" தொழிற்சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட தோன்றியது! - நடுங்க வைத்த இமயம் | திசையெல்லாம் பனி- 4

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஆங்கிலத்தை வெறுக்கும் கொரியர்கள் வறுமையில் இருந்து மீண்டது எப்படி? - 90களின் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மொழி தெரியாமல், பணமும் இல்லாமல் தவித்த தருணம்! - ஆம்ஸ்டர்டாம் டு ஸ்விஸ் சுவாரஸ்ய அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் கல்லூரி நாட்களை நிறைவாக்கிய சினிமா அரட்டைகள்! | கிராமத்தானின் பயணம் 26

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கோனோமா: பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. இந்தியாவின் தனித்துவமான கிராமம் பற்றி தெரியுமா?

நாகலாந்தின் ஒரு தனித்துவமான கிராமத்தைப் பற்றிதான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். நாகாலாந்தின் தலைநகரான கோஹிமாவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ”கோனோமா கிராமம்” குறித்து பயண வலைப்பதி... மேலும் பார்க்க

Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய விதிமுறைகள் என்னென்ன?

ரயிலில் அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கும், அவசரத்திற்கு பயணம் மேற்கொள்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தட்கல் முன்பதிவில் சமீப காலமாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன.ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத... மேலும் பார்க்க