அரக்கோணத்தில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
லூவ்ரே: உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் மூடல்- என்ன காரணம் தெரியுமா?
உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத்தலமாக லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இப்படி இருக்கையில் இந்த அருங்காட்சியம் திடீரென மூடப்பட்டிருக்கிறது.
இது குறித்து அறியாத சுற்றுலா பயணிகள், அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் காத்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும் லூவ்ரே எதற்காக மூடப்பட்டது. இதற்கான பின்னணி என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள லூவ்ரே கலை மற்றும் கலாச்சார பொக்கிஷங்களை பாதுகாக்கும் அருங்காட்சியமாகும்.

இந்த அருங்காட்சியகம் உலகில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. லூவ்ரே அருங்காட்சியத்தில் மோனாலிசா போன்ற புகழ்பெற்ற ஓவியங்கள், கிரேக்க, ரோமானிய கலைப் பொருள்கள் மற்றும் பிற அரிய கலை படைப்புகள் இங்கு உள்ளன. இவற்றைக் காண உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் இங்கு குவிகின்றனர்.
இந்த நிலையில் இந்த அருங்காட்சியகத்தின் ஊழியர்கள் கட்டுக்கடங்காத கூட்டம், பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் பல ஆண்டுகளாக மோசம் அடைந்து வரும் நிலைமை குறித்து எச்சரித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு 8.7 மில்லியன் பார்வையாளர்களை கண்டுள்ளது லூவ்ரே அருங்காட்சியகம்.
ஆனால் கூட்ட நெரிசல், மோசமான பணி நிலைமைகள் காரணமாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த அருங்காட்சியம் தற்போது மூடப்பட்டுள்ளது..
உள்கூட்டத்தின் போதே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கேலரி ஊரியர்கள் தங்களது கடமைகளை ஏற்க மறுத்திருக்கின்றனர்.
இதனை அறியாத ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அந்த சுற்றுலா தலத்தின் முன்பு காத்திருக்கின்றனர்.
அங்கு இருக்கும் ஊழியர்கள் ஆறு வருடங்களாக இதற்காக காத்திருப்பதாகவும் ”இது கலையைப் பற்றியது மட்டுமல்ல அதனை பாதுகாக்கும் மக்களைப் பற்றியது” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
அருங்காட்சியதை புதுப்பிக்கும் திட்டத்தை ஏற்கனவே பிரெஞ்சு ஜனாதிபதி அறிவித்திருந்தார். "கடந்த 10 ஆண்டுகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆனால் அதற்கான நிதி குறைந்து விட்டதாக" தொழிற்சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.