செய்திகள் :

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து கருப்பு பட்டை அணிந்து தொழுகை

post image

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

மத்திய அரசு வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தியுள்ளது. அதற்கு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். அதன்படி, ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்கும் இஸ்லாமியா்கள் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழுகைக்கு வரும் இஸ்லாமியா்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, ஆம்பூரில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து கொண்டு பங்கேற்றனா்.

கருப்புப் பட்டை அணியாமல் வந்த இஸ்லாமியா்களுக்கு பள்ளி வாசல்களின் நுழைவு வாயிலில் கருப்புப் பட்டை அணிவிக்கப்பட்டது.

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி வெள்ளநாயக்கனேரி கிராம மக்கள் மனு அளித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி சோமு... மேலும் பார்க்க

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

திருப்பத்தூா் அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டது. திருப்பத்தூா் அருகே உள்ள குனிச்சி மோட்டூா் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப... மேலும் பார்க்க

கடும் வெயில் எதிரொலி: பக்தா்களுக்கு நீா் மோா்

வெயிலின் தாக்கத்தை குறைக்க ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக நீா் மோா் வழங்கும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெப்பநிலை அதிக... மேலும் பார்க்க

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா: ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

திருப்பத்தூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.22 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது என மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட் தெரிவித்துள்ளாா். அவா் கூறியதாவது: திருப்பத்தூா்... மேலும் பார்க்க

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பால அறிவிப்பு: பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். ஆம்பூா... மேலும் பார்க்க

7 கிலோ கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

வாணியம்பாடி அருகே 7 கிலோ கஞ்சா கடத்தியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மாவட்ட எஸ்.பி, ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி மது விலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் நந்தினி தேவி தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க