செய்திகள் :

வக்ஃப் மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: அதிமுக ஆதரவு!

post image

தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, 655 பக்க அறிக்கை தயாரித்தது.

இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு எதிராக வக்ஃப் சட்டத் திருத்தங்கள் இருப்பதாக தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை இன்று தாக்கல் செய்தார்.

தீர்மானம் தொடர்பாக பேசிய முதல்வர், “மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நீதிமன்றத்துக்கு முரணான தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்ஃப் சட்டத்தில் இருக்கிறது. இந்த திருத்த சட்டங்கள் வக்ஃப் வாரியத்தையே எதிர்காலத்தில் செயல்படவிடாமல் செய்யும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தங்களின் நிலைபாட்டை வெளிப்படுத்தி பேசினர்.

அதிமுக ஆதரவு

அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:

”வக்ஃப் வாரிய சட்டத்தில் தற்போது கொண்டுவர திட்டமிட்டுள்ள திருத்தங்கள் வாரியத்தின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, வக்ஃப் வாரியத்தின் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருப்பார்கள். ஆனால், புதிய திருத்தத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர்களாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரிய தலைவர், உறுப்பினர்களுக்கு இருந்த அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய சொத்துகள் முஸ்லிம் பெரியவர்களால் தானம் அளிக்கப்பட்டவை ஆகும். புதிய திருத்தங்கள் கொண்டுவந்தால், முஸ்லிம் பெரியவர்கள் தானம் அளித்த நோக்கமே சிதைந்துவிடும். பிற மதத்தினர் வக்ஃப் வாரியத்தில் சேர்க்கப்பட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிராக அமையும் அபாயம் உள்ளது.

பொதுவாக சட்டத்திருத்தங்கள் என்றால் ஓரிரு திருத்தங்களே கொண்டுவரும். ஆனால், 40-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டுவந்து வாரியத்தின் அமைப்பையே மாற்றும் விதமாக அமைந்துள்ளது. இதில், பெண்களுக்கு பிரதிநிதித்துவம் என்ற திருத்தத்தை வரவேற்கிறோம். இருப்பினும், சட்டத்தின் பெரும்பான்மையான திருத்தங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதால், சட்டத்திருத்தத்தை எதிர்த்து முதல்வரின் தீர்மானத்தை ஆதரிக்கிறேன்” என்றார்.


இதையும் படிக்க : முஸ்லிம்களின் மத உரிமையைப் பறிக்கும் வக்ஃப் திருத்த மசோதா: முதல்வர் ஸ்டாலின்

இபிஎஸ்ஸுக்கு முதல்வர் வேண்டுகோள்

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைவரும் வக்ஃப் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், தில்லி சென்றுதிரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறுசீரமைப்பு, இருமொழிக் கொள்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதனைப் போன்று, வக்ஃப் சட்டத்திருத்தங்கள் தொடர்பாகவும் அவரிடம் வலியுறுத்த வேண்டுகோள் வைக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தனித் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க