செய்திகள் :

வங்கி முறைகேடுகள் அதிகரிப்பு: பிரதமா் மீது காா்கே குற்றச்சாட்டு

post image

வங்கி முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் வங்கி முறைகேடுகள் ரூ.6,36,992 கோடியாக அதிகரித்துள்ளது. இது 416 சதவீத அதிகரிப்பாகும். மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகும் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது கடந்த 6 ஆண்டுகளில் 291 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த ஆண்டில்தான் கள்ள நோட்டுகள் புழக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.

பிரதமா் மோடி தனது நரம்புகளில் ‘சிந்தூா்’ (குங்குமம்) பாய்வதாகக் கூறியுள்ளாா். அவரின் நரம்பில் என்ன பாய்கிறது என்பது நமக்குத் தேவையில்லை. ஆனால், அவரின் அரசின் நரம்புகளில் முறைகேடுகளும், ஊழலும் பாய்கிறது’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2016 நவம்பா் 8-ஆம் தேதி இரவு திடீரென பணமதிப்பிழப்பை அறிவித்து நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அதிச்சியை அளித்தாா் பிரதமா். அதில் இருந்து நாடு இப்போது வரை மீள முடியவில்லை. ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்தி, அதையும் சில ஆண்டுகளிலேயே திரும்பப் பெற்றாா். இதனால், கள்ள நோட்டுகள் குறையும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது ரூ.500 கள்ள நோட்டு 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வீண் என்பது தெரியவருகிறது’ என்று கூறியுள்ளாா்.

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்: 3 வீரர்கள் பலி; பலர் மாயம்!

சிக்கிம் ராணுவ முகாம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகினர். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மணிப்பூா், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு... மேலும் பார்க்க