செய்திகள் :

வடகிழக்கு மாநிலங்களைக் கலங்கடிக்கும் கனமழை! இயல்பு வாழ்க்கை முடக்கம்!

post image

தொடர் மழையால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம், அசாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால்; இன்று (மே 30) அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகக் கூறப்படுகிறது.

மிசோரம்

மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்சால் மாவட்டத்தில், இன்று (மே 30) காலை பெய்த கனமழையால், அங்குள்ள ஓர் வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கடந்த சில நாள்களாக மிசோரம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

நாகாலாந்து

நாகாலாந்தின் திமாப்பூர் - கோஹிமா சாலையில், இன்று (மே 30) காலை வந்துக்கொண்டிருந்த லாரி மீது பாறைகள் சரிந்து விழுந்ததில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதுடைய அதன் ஓட்டுநர் சம்பவயிடத்திலேயே பலியானார்.

அசாம்

அசாமின் குவாஹட்டி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அம்மாநிலத்தில் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், அசாமின் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரம், தொடர் மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படக்கூடும் எனவும் மரங்கள் சாயக்கூடும் எனவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மணிப்பூர்

மணிப்பூர் அரசு அம்மாநில மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும் வானிலைக் குறித்த மாநில மற்றும் மத்திய அரசுகளின் தகவல்களை மட்டும் பின்பற்றவும்; வதந்திகளை நம்பவேண்டாமெனவும் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள், மலைப்பகுதிகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அம்மாநிலங்களின் அரசுகள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஜெய்ப்பூர்: 2 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-யை எட்டியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்... மேலும் பார்க்க

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் பிரதான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை -மத்திய அமைச்சா் கஜேந்திர ஷெகாவத்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, அரசிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு பதிலளிக்கத் தயாா் என்று மத்திய... மேலும் பார்க்க

உ.பி.யில் ரயிலைக் கவிழ்க்க சதி: ஓட்டுநா் சாமா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் குறுக்கே இரும்புக் கம்பி இருந்ததை ஓட்டுநா் முன்கூட்டியே கவனித்து அவசர கால ‘பிரேக்’கை பயன்படுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக ரயில்வே காவல் துறை... மேலும் பார்க்க

இடைத்தோ்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளா் பட்டியல் திருத்தம்

நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இடைத்தோ்தலையொட்டி... மேலும் பார்க்க

2 ஆண்டு சிறைத் தண்டனை எதிரொலி: உ.பி. எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி தகுதிநீக்கம்

உத்தர பிரதேசத்தில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி, சட்டப்பேரவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அரசு வட்டாரங்கள் ஞாயி... மேலும் பார்க்க