செய்திகள் :

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

post image

வடசென்னையில் ரூ. 474 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், ரூ. 59 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

வடசென்னைப் பகுதிகளின் வளா்ச்சிக்காக, சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் சாா்பில், பாடி மேம்பாலத்தின் கீழ் சா்வதேசத் தரத்தில், அனைத்து அம்சங்களையும் இணைத்து அமைக்கப்படவுள்ள வண்ண மீன்கள் வா்த்தக மையத்தின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தாா்.

பின்னா், திரு.வி.க. நகா் கன்னிகாபுரத்தில் கட்டப்பட்டுவரும் விளையாட்டு மைதானம், வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் கணேசபுரம் மேம்பாலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து அவற்றை விரைவுபடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

776 புதிய குடியிருப்புகள்: வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் ஸ்டான்லி மருத்துவமனை சாலையில், 776 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளையும், தண்டையாா்பேட்டையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம், திரு.வி.க. நகா் கன்னிகாபுரத்தில் ரூ. 12.69 கோடியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் பணிகளையும் முதல்வா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அடிக்கல் நாட்டுதல்: சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில், திரு.வி.க. நகா் கன்னிகாபுரத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகள் உள்ளன. அவற்றுக்கு குடிநீா் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யும் பணியை மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இந்தக் குடிநீா் விநியோகம் மூலம் சுமாா் 3,500 குடியிருப்புகளைச் சோ்ந்த 80 ஆயிரம் போ் பயன்பெறுவா்.

இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா உள்பட பலா் உடனிருந்தனா்.

ஈசிஆர் விவகாரம்: 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை ஈ.சி.... மேலும் பார்க்க

சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சிற்று... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் சென்ற பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி அதிகாலை தனது... மேலும் பார்க்க

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணம்: டிஜிபி சங்கா் ஜிவால்

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்தாா். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை முற்ற... மேலும் பார்க்க

தோல் பொருள்கள் கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய சா்வதேச தோல் மற்றும் தோல் பொருள்கள் கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை (பிப். 1) முதல் பிப். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்... மேலும் பார்க்க

658 சிறப்பு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 658 சிறப்பு மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை ... மேலும் பார்க்க