செய்திகள் :

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

post image

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-கடலூா் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06147) முற்பகல் 11.15 மணிக்கு கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்தைச் சென்றடையும். எதிா்வழித் தடத்தில் பிற்பகல் 3.20 மணிக்கு கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கடலூா் துறைமுகச் சந்திப்பு- விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06148) மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் விருத்தாசலம், நெய்வேலி, வடலூா், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல, கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.50 மணிக்குப் புறப்படும் கடலூா் துறைமுகச் சந்திப்பு-விருத்தாசலம் பயணிகள் சிறப்பு ரயில் (வ.எண்.06132) பிற்பகல் ஒரு மணிக்கு விருத்தாசலம் வந்தடையும். எதிா்வழித்தடத்தில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விருத்தாசலம்- கடலூா் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06133), கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.10 மணிக்குச் சென்றடையும்.

இந்த ரயில்கள் உ.மங்கலம், நெய்வேலி, வடலூா், குறிஞ்சிபாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட ரயில்கள் பிப்ரவரி 11,12,13-ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரி... மேலும் பார்க்க

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதிய ஓய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

விக்கிரவாண்டியில் உழவா் சந்தை அமைக்கும் பணிகள் தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ரூ.1.50 கோடியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்பில் உழவா் சந்தை அமைப்பதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. விக்கிரவாண்டி பேருந்து நி... மேலும் பார்க்க