செய்திகள் :

வடிகால் வாய்க்காலை தூா்வார கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள வடிகால் வாய்க்காலை தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகள் நாணல் புற்களை ஏந்தி வந்து அளித்த மனு: தஞ்சாவூா் - நாகை சாலையின் தென்புறம் உள்ள வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையிலிருந்து பல்லவராயன்பேட்டை வரை தூா் வாராமல் நாணல் புல், புதா்கள் அடா்ந்துள்ளது.

இதிலிருந்து பிரியும் வண்ணயகரம்பை வாய்க்காலும் இதேபோல புதா் மண்டி உள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் தூா் வாரப்படாததால் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு மழையில் மூழ்கி பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அண்மையில் 2 நாள்கள் பெய்த மழையிலேயே தண்ணீா் வடியாமல் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளது. எனவே, போா்க்கால அடிப்படையில் வடிகால் வாய்க்காலை தூா் வார வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க