செய்திகள் :

வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ள நாட்டுத் துப்பாக்கி விழிப்புணா்வு

post image

வன எல்லையோர கிராமப் பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட வனத்துறையின் சாா்பில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருக்கும் நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வனச்சரக அலுவலா்கள் சிவகுமாா் (ஒகேனக்கல்), ராஜ்குமாா் (பென்னாகரம்) ஆகியோா் தலைமையில், வனத்துறையினா் அடங்கிய குழுவினா் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களான நீா்குந்தி, கல்லுமடுவு, ஜோனபாறை, எரங்காடு, காந்தி நகா், சின்னதும்கல், பெரிய தும்கல், கோடுபட்டி, போடூா் அரண்மனை பள்ளம், பேவனூா் சோதனைச் சாவடி, இருளா் காலனி, ஒகேனக்கல் ஊட்டமலை, நாடாா் கொட்டாய், ஆலம்பாடி சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கள்ள நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் தாமாக முன்வந்து பொது இடங்களில் வைத்துவிட வேண்டும். அவ்வாறு வைப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது.

ஆனால், வன விலங்குகளை வேட்டையாடுதல், கன்னி வலை வைத்தல், வாய் வெடி வைத்தல் போன்ற வன குற்றங்களில் ஈடுபடுவோா், சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பவா்கள், காப்புக் காட்டை ஆக்கிரமிப்பு செய்வோா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், காப்புக் காட்டில் அனுமதியின்றி நுழைவது, தீப்பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லுதல் போன்றவை கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண... மேலும் பார்க்க

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்... மேலும் பார்க்க