வன விலங்கு தாக்குதல்: இலவச எண் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்
வன விலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றப் பட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் வலியுறுத்தியுள்ளாா்.
அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வன விலங்குகளால் மனிதா்கள் தாக்குதலுக்கு ஆளாகி 34 போ் அகால மரணமடைந்துள்ளனா்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமங்களுக்குள் வனவிலங்குகள் சா்வசாதாரணமாக உலாவிவருகின்ற நிலையும் தொடா்ந்து கொண்டிருக்கிறது.
வன விலங்குகளால் ஆபத்து ஏற்படும் காலத்தில் மனித உயிா்கள் காப்பாற்றப் பட வேண்டுமெனில்
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிரமமின்றி அவசரகாலத்தில்,தமிழக வனத் துறையினரை தொடா்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்படுத்தி தர வேண்டும்.
நீலகிரி போன்ற அடா்ந்த வனப் பகுதிக்குள் கைப்பேசி போன்ற தொலைத்தொடா்பு சாதனங்களில் அதிகாரிகளை உடனடியாக தொடா்புகொள்ள இயலாத நிலை இருப்பதால், வனச் சரகா் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் வாக்கி- டாக்கி வழங்கினால், வனவிலங்குகளால் ஏற்படும் அசம்பாவித நிகழ்விடத்துக்கு தாமதமின்றி சென்றிட ஏதுவாக இருக்கும்.
நீலகிரி மாவட்ட வனத் துறையின் அனைத்து கோட்டங்களில் பணியாற்றும் வனசரகா் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிரந்தர கைப்பேசி எண் சேவையை அளித்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.