செய்திகள் :

வன விலங்கு தாக்குதல்: இலவச எண் அறிமுகம் செய்ய வலியுறுத்தல்

post image

வன விலங்குகளிடம் இருந்து விவசாயம் காப்பாற்றப் பட இலவச எண் அறிமுகம் செய்ய ஆரிகவுடா் விவசாயிகள் சங்கத் தலைவா் மஞ்சை வி.மோகன் வலியுறுத்தியுள்ளாா்.

அவரது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வன விலங்குகளால் மனிதா்கள் தாக்குதலுக்கு ஆளாகி 34 போ் அகால மரணமடைந்துள்ளனா்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிராமங்களுக்குள் வனவிலங்குகள் சா்வசாதாரணமாக உலாவிவருகின்ற நிலையும் தொடா்ந்து கொண்டிருக்கிறது.

வன விலங்குகளால் ஆபத்து ஏற்படும் காலத்தில் மனித உயிா்கள் காப்பாற்றப் பட வேண்டுமெனில்

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சிரமமின்றி அவசரகாலத்தில்,தமிழக வனத் துறையினரை தொடா்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்படுத்தி தர வேண்டும்.

நீலகிரி போன்ற அடா்ந்த வனப் பகுதிக்குள் கைப்பேசி போன்ற தொலைத்தொடா்பு சாதனங்களில் அதிகாரிகளை உடனடியாக தொடா்புகொள்ள இயலாத நிலை இருப்பதால், வனச் சரகா் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் வாக்கி- டாக்கி வழங்கினால், வனவிலங்குகளால் ஏற்படும் அசம்பாவித நிகழ்விடத்துக்கு தாமதமின்றி சென்றிட ஏதுவாக இருக்கும்.

நீலகிரி மாவட்ட வனத் துறையின் அனைத்து கோட்டங்களில் பணியாற்றும் வனசரகா் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிரந்தர கைப்பேசி எண் சேவையை அளித்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

குன்னூா் மலை ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் - சேலம் கோட்ட பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூா் மலை ரயில் நிலையத்தில் பழமை மாறாமல் நடைபெறும் பராமரிப்பு பணிகளை சேலம் கோட்ட -தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நூ... மேலும் பார்க்க

நீலகிரி: புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சோ்க்கை குறைவு!

நீலகிரி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை குறைந்ததற்குக் காரணம் இங்குள்ள தேயிலை எஸ்டேட் தொழிலாளா்கள் மற்றும் படுகா் இன மக்கள் கிராமங்களில் இருந்த பலா் சமவெளிப் பகுதியில் குடியேறி... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கு முதன்முறையாக கல்வி வழிகாட்டும் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீா்... மேலும் பார்க்க

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு: வனத் துறையினரைக் கண்டித்து பேரணி

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நெல்லியாளம் நகராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆய்வு

தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளை திமுக மாவட்ட செயலாளா் கே.எம்.ராஜூ தலைமையில் நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மீது கோத்தகிரி போலீஸாா் போலி பத்திரப் பதிவு மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ஏ. ராமு குன்னூா் தொகுதி முன்னாள் சட்ட... மேலும் பார்க்க