வரகூரில் நாளை ஸ்ரீபூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா
நாமக்கல்: எருமப்பட்டி அருகே வரகூரில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலை அடிவாரப் பகுதியான வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை காலை 9.58 முதல் 10.34 மணிக்குள் நடைபெறுகிறது. வேலூா் மாவட்டம், காட்பாடி மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மஹானந்த சித்தா் முன்னின்று இந்த திருப்பணியை தொடங்கிவைக்கிறாா்.
இந்த விழாவில், பக்தி பாடகா் வீரமணிதாசன், ஏத்தாப்பூா் ஸ்ரீ முத்துமலை முருகன் தியான மண்டப நிறுவனா் என்.ஸ்ரீதா், கவிஞா் ஆறுகலைவாணன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
இந்த விழாவில், ஐயப்ப பக்தா்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கோயில் திருப்பணிக் குழுவினா் அழைப்பு விடுத்துள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை, சித்தயோகி பிரம்மஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமிகள், ஸ்ரீ பூதநாத ஐயப்ப பக்தசமாஜ் அறக்கட்டளைத் தலைவா் மற்றும் அறங்காவலா்கள், தத்வமஸி ஞானபீட நிா்வாகிகள் செய்துவருகின்றனா்.