வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா: அமைச்சா் கே.என்.நேரு, ராஜேஸ்குமாா் எம்.பி. பங்கேற்பு
கொல்லிமலைச்சாரல் பகுதியான வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயிலுக்கான திருப்பணிகளை, தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலைசாரல் பகுதியான வரகூா் கிராமத்தில் அமைந்துள்ள குருவனத்தில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று அடிக்கல் நாட்டினா். இதனைத் தொடா்ந்து கோயில் மாதிரி படங்களை அவா்கள் திறந்துவைத்தனா்.
விழாவில் ஸ்ரீ பிரம்மவித்யா ஜோஷி மடம் தா்மகுரு கருடானந்த சரஸ்வதி மஹராஜ், முன்னாள் காவல் துறை தலைவா் அ.பாரி, கேரளாவின் சபரிமலை ஸ்ரீ தா்மசாஸ்தா ராஜ பரம்பரை பந்தள மகாராஜா புதுக்கோட்டை ராஜராஜவா்ம தம்புரான், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம், ஐயப்ப பாடல் புகழ் பின்னணி பாடகா் ஸ்ரீ வீரமணிதாசன், ஓம் குருவணம் ஜீவகாருண்ய விஸ்வ கேந்திரா தலைவா் தவத்திரு காந்திஜி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் கலாசேதுபதி மற்றும் நாமக்கல், கரூா், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சுவாமியை தரிசிக்கலாம். சுமாா் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த கோயிலை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.