செய்திகள் :

வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா: அமைச்சா் கே.என்.நேரு, ராஜேஸ்குமாா் எம்.பி. பங்கேற்பு

post image

கொல்லிமலைச்சாரல் பகுதியான வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயிலுக்கான திருப்பணிகளை, தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலைசாரல் பகுதியான வரகூா் கிராமத்தில் அமைந்துள்ள குருவனத்தில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று அடிக்கல் நாட்டினா். இதனைத் தொடா்ந்து கோயில் மாதிரி படங்களை அவா்கள் திறந்துவைத்தனா்.

விழாவில் ஸ்ரீ பிரம்மவித்யா ஜோஷி மடம் தா்மகுரு கருடானந்த சரஸ்வதி மஹராஜ், முன்னாள் காவல் துறை தலைவா் அ.பாரி, கேரளாவின் சபரிமலை ஸ்ரீ தா்மசாஸ்தா ராஜ பரம்பரை பந்தள மகாராஜா புதுக்கோட்டை ராஜராஜவா்ம தம்புரான், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம், ஐயப்ப பாடல் புகழ் பின்னணி பாடகா் ஸ்ரீ வீரமணிதாசன், ஓம் குருவணம் ஜீவகாருண்ய விஸ்வ கேந்திரா தலைவா் தவத்திரு காந்திஜி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் கலாசேதுபதி மற்றும் நாமக்கல், கரூா், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சுவாமியை தரிசிக்கலாம். சுமாா் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த கோயிலை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க