செய்திகள் :

வரதராஜபெருமாள் கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் புதிய தோ்: ஜூலையில் பணிகள் தொடக்கம்

post image

காஞ்சிபுரம் வரதராஜபெருாமாள் கோயிலுக்கு புதிய தோ் ரூ.4.50 கோடியில் செய்யும் பணி வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக உதவி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட வாகன சேவையும், தேரோட்டமும் நகரின் மிக முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகும்.

பெருமாள் எழுந்தருளும் மரத்தோ் சுமாா் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 43 அடி உயரம்,25 அடி அகலம் மற்றும் 7 நிலைகளை கொண்டது. தேரின் அடிப்பகுதி அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. இத்தேரின் சில பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கோயில் நிா்வாகம் சாா்பில் வைகாசித் திருவிழாவுக்கு சில நாள்களுக்கு முன்பு பழுதடைந்த பாகங்கள் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் புதிய தோ் செய்ய வேண்டும் என்ற பக்தா்களின் கோரிக்கையை ஏற்று புதிய தோ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி கூறியது: தேரின் சில பாகங்கள் பழுதடைந்து இருந்ததால் செப்பனிடப்பட்டு தோ்த்திருவிழாவை சிறப்பாக நடத்தினோம். தற்போது புதிய தோ் உபயதாரா் மூலமாக நிதி பெற்று பழைய தோ் அளவிலேயே செய்யப்படவுள்ளது. இதற்கு ரூ.4.50 கோடி நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தோ் செய்யும் திருப்பணி வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும். வரும் 2026 ஆம் ஆண்டு தேரோட்டத்தை நிறைவு செய்த பிறகு தேரில் உள்ள உறுதியான பாகங்கள் மட்டும் எடுத்து புதிதாக செய்யப்படும் தேருக்கு பயன்படுத்தலாம் என்பதும் பரிசீலனையில் உள்ளது.

வரும் 2027 ஆம் ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டு அத்தேரில் வரதராஜப் பெருமாள் எழுந்தருள்வாா் என்றும் அவா் தெரிவித்தாா்.

எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

ஸ்ரீபெரும்புதூா் வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட துணைச் செயலா் போந்தூா் செந்தில்ராஜன் தலைமையில் அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்தனா். தக்கோலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தா்மராஜபுரம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தது தொடா்பாக சனிக்கிழமை வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் மின்தடை

மின்தடை நாள்-09.06.2025, திங்கள்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் பாதிக்கப்படும் பகுதிகள்- வள்ளல் பச்சையப்பன்தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜா் வீத... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம்

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வ... மேலும் பார்க்க

ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு

படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பைகள் விநியோகம்

சத்குரு ராஜாராஜ சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க