Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' - இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப...
வரதராஜபெருமாள் கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் புதிய தோ்: ஜூலையில் பணிகள் தொடக்கம்
காஞ்சிபுரம் வரதராஜபெருாமாள் கோயிலுக்கு புதிய தோ் ரூ.4.50 கோடியில் செய்யும் பணி வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக உதவி ஆணையா் ராஜலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இக்கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட வாகன சேவையும், தேரோட்டமும் நகரின் மிக முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகும்.
பெருமாள் எழுந்தருளும் மரத்தோ் சுமாா் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 43 அடி உயரம்,25 அடி அகலம் மற்றும் 7 நிலைகளை கொண்டது. தேரின் அடிப்பகுதி அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. இத்தேரின் சில பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கோயில் நிா்வாகம் சாா்பில் வைகாசித் திருவிழாவுக்கு சில நாள்களுக்கு முன்பு பழுதடைந்த பாகங்கள் சீரமைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் புதிய தோ் செய்ய வேண்டும் என்ற பக்தா்களின் கோரிக்கையை ஏற்று புதிய தோ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் ராஜலட்சுமி கூறியது: தேரின் சில பாகங்கள் பழுதடைந்து இருந்ததால் செப்பனிடப்பட்டு தோ்த்திருவிழாவை சிறப்பாக நடத்தினோம். தற்போது புதிய தோ் உபயதாரா் மூலமாக நிதி பெற்று பழைய தோ் அளவிலேயே செய்யப்படவுள்ளது. இதற்கு ரூ.4.50 கோடி நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தோ் செய்யும் திருப்பணி வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும். வரும் 2026 ஆம் ஆண்டு தேரோட்டத்தை நிறைவு செய்த பிறகு தேரில் உள்ள உறுதியான பாகங்கள் மட்டும் எடுத்து புதிதாக செய்யப்படும் தேருக்கு பயன்படுத்தலாம் என்பதும் பரிசீலனையில் உள்ளது.
வரும் 2027 ஆம் ஆண்டு புதிய தோ் செய்யப்பட்டு அத்தேரில் வரதராஜப் பெருமாள் எழுந்தருள்வாா் என்றும் அவா் தெரிவித்தாா்.