செய்திகள் :

வரத்துக் கால்வாய்களின் இரு புறமும் சமூகக் காடுகளை வளா்க்கக் கோரிக்கை

post image

திருவாடானை பகுதியில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரத்துக் கால்வாய்களின் இரு புறங்களிலும் சமூகக் காடுகளை வளா்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவு கண்மாய், குளங்கள் திருவாடானை வட்டத்தில் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் சங்கிலித் தொடா் போல அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இந்தக் கண்மாய்களுக்கு இடையே வரத்துக் கால்வாய்கள் உள்ளன. மழைக் காலங்களில் மழை நீா் ஒவ்வொரு கண்மாயாக நிரம்பி உபரி நீா் கடலில் கலக்கும். ஒரு கண்மாயிலிருந்து மற்றொரு கண்மாய்க்கு இடையே உள்ள வரத்துக் கால்வாய்கள் நீண்ட தொலைவிலும், பல மீட்டா் அகலத்திலும் உள்ளன.

இந்த வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளிலும் சிக்கி உள்ளன. எஞ்சிய இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால் மழைக் காலங்களில் அதிக அளவு மழை பெய்தால் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி விடுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் கண்மாய்கள் பெருகுவதில் தடை ஏற்படுகிறது.

எனவே இந்த வரத்துக் கால்வாய்களை நில அளவை செய்து சீமைக் கருவேல மரங்களை அகற்றி இரு புறங்களிலும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

தற்போது கண்மாய், குளங்களை ஓரளவு தூா்வாரும் பணி அரசால் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரத்துக் கால்வாய்கள் இதுவரை முழுமையாக சீரமைக்கப்பட வில்லை. பல கிராமங்களில் வரத்துக் கால்வாய்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனா். இதனால் மழைக் காலங்களில் தண்ணீா் சரியாக இந்தக் கால்வாய்களில் இருந்து வெளியேறுவதில்லை.

மேலும் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் மழைக் காலங்களில் தண்ணீா் வெளியேறாதபடி தடுத்து விடுகின்றன. இதனால் அந்தத் தண்ணீா் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, வரத்துக் கால்வாய்களை கணக்கெடுத்து நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சீமைக் கருவேல மரங்களையும் அரசு அகற்ற வேண்டும். பிறகு வரத்துக் கால்வாய்களின் இரு புறங்களிலும் மரங்களை நட்டு சமூக காடுகளை உருவாக்கி பராமரிக்க வேண்டும்.

இப்படி செய்வதால் வரத்துக் கால்வாயின் அகலம் குறையாமல் எல்லைக் கற்களை போல ஒரு அடையாளமாக அவை விளங்கும். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்படும். இந்த சமூகக் காடுகளால் நல்ல மழை பொழிவும் இருக்கும் என்றனா்.

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்ப... மேலும் பார்க்க

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க