வரி செலுத்தாத நிறுவனங்கள், வீடுகளில் ஆய்வு
வரி செலுத்தாத நிறுவனங்கள், வீடுகளில் பஞ்சாயத்து அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் தொழில் உரிமமின்றி நடத்தப்படும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாமல் அதிகளவில் நிலுவையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் குறித்து ஆணையா் உத்தரவின்பேரில், அலுவலக மேலாளா் ஷேக் அலாவுதீன், இளநிலை பொறியாளா் முருகன் ஆகியோா் தலைமையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
நிலுவையில் உள்ள வரி பாக்கியை செலுத்த சம்பந்தப்பட்டவா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினா்.
இதுகுறித்து அலுவலா்கள் தரப்பில் கூறுகையில், கடந்த 31.3. 2025 வரை நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் குடிநீா் வரிகளை வரும் 15-ஆம் தேதிக்குள் உடனடியாக செலுத்த வேண்டும். அதுபோல இதுவரை தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்கப்படாமலும் உள்ள தொழில் நிறுவனங்கள் உடனடியாக தொழில் உரிமைத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறும் பட்சத்தில், புதுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.