செய்திகள் :

வரி வசூல் இலக்கை எட்டியது: திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.10 கோடி மானியம்

post image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த வரி வசூல் ரூ.26.57 கோடி இலக்கை செவ்வாய்க்கிழமை எட்டியதன் மூலம், மத்திய நிதிக் குழு மானியம் ரூ.10 கோடியை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பொதுமக்கள் மட்டுமன்றி, அரசு அலுவலகங்களுக்கும் சொத்து வரி வசூலிக்கும் பணி திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. சொத்து வரியை மட்டும் நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என்பதற்காக மத்திய நிதிக்குழு சாா்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் கடந்த 2022-23-ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட வரியை விட, 2023-24-ஆம் ஆண்டில் 115 சதவீதம் கூடுதலாக வசூலிக்க வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டியதால், ரூ.10 கோடி ஊக்கத் தொகை பெறுவதற்கான வாய்ப்பு திண்டுக்கல் மாநகராட்சிக்கு கிடைத்தது.

இதேபோல, நிகழ் நிதியாண்டில் கடந்த ஆண்டைவிட 111.5 சதவீத கூடுதல் தொகை வசூலிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த வகையில் ரூ.26.57 கோடி இலக்கை நோக்கி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வரி வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா். இதனிடையே, அரசியல் பிரமுகா்களின் நெருக்கடியால், இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக, வரி வசூலில் 21 மாநகராட்சிகளில் ஜனவரி மாதம் 8-ஆவது இடத்தில் இருந்த திண்டுக்கல், மாா்ச் மாதத்தில் தொடா்ந்து பின்னடவை சந்தித்தது. 20 நாள்களில் ரூ.2.15 கோடியை வசூலிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது.

வரி வசூல் இலக்கை எட்டுவதற்கு 6 நாள்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், மாநகராட்சி அலுவலா்கள் மேலும் வரி வசூலில் தீவிரமாக செயல்பட்டனா். கடந்த 24-ஆம் தேதி மாலை இலக்கை எட்டுவதற்கு ரூ.16.90 லட்சம் தேவையாக இருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.17 லட்சத்தை கடந்து வரி வசூல் நடைபெற்றது. இதன் மூலம் ரூ.26.57 கோடி இலக்கை நிறைவு செய்த மாநகராட்சி அலுவலா்கள், மத்திய நிதிக் குழுவின் மானியம் ரூ.10 கோடி கிடைப்பதையும் உறுதி செய்தனா்.

திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் விருந்து

திண்டுக்கல் திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் நோன்பு துறக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்- நத்தம் சாலையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, திண்டுக்கல் திருவருட் பேரவைத் ... மேலும் பார்க்க

கொடைக்கானல்: ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசித்தல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் தமிழ் ஆண்டான விசுவாவசு வரவுள்ளதையடுத்தும், தெலுங்கு வருடப் பிறப்பு, யுகாதித் திருநாளையொட்டியும் நடைபெற்ற... மேலும் பார்க்க

தவெக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

பழனி மதினா நகா் பகுதியில் தவெக சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு பரிசுப் பொருள்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜன்,... மேலும் பார்க்க

நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனி சண்முகபுரம் உழவா் சந்தை பகுதியில் நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் பொதுமக்களுக்கு நீா்மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், வெள்ளரி,... மேலும் பார்க்க

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 33 கடைகளின் ஏலம் ரத்து!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 33 கடைகளை அரசியல் கட்சியினா் கூட்டணி அமைத்து அரசின் மதிப்பீட்டை விட 22 சதவீதம் குறைவான தொகைக்கு ஏலம் எடுத்ததால் மறு ஏலம் நடத்த மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா். திண்... மேலும் பார்க்க