செய்திகள் :

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

post image

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.

நாள்தோறும் பலரும் பார்க்கும் முக்கிய தலைப்புகளில் தங்கம், வெள்ளி விலை நிலவரமும் ஒன்று. வாங்குகிறோமோ இல்லையோ, தங்கம் விலை ஏறினால் கவலைப்படுவதும், குறைந்தால் மகிழ்ச்சி அடைவதும் மக்களின் மனப்பான்மையாக மாறிவிட்டது.

இந்த நிலையில்தான் செயற்கை தங்கம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள புத்தாக்க நிறுவனமான மாரதான் ஃபியூஷன், பாதரசத்தைக் கொண்டு செயற்கை தங்கம் உருவாக்கும் நுட்பத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான மராத்தான் ஃபியூஷன் மிகவும் வித்தியாசமான நுட்பத்தை முன்மொழிகிறது.

அணுக்கரு இணைவு உலையில் உள்ள நியூட்ரான் துகள்களிலிருந்து வரும் கதிரியக்கத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு வடிவத்தில் உள்ள பாதரசத்தை மற்றொரு வடிவமாக மாற்றுவதன் மூலம் பாதரசம்-197 என்பதை உருவாக்கலாம்.

இது பின்னர் நிலையான தங்க வடிவுக்கு சிதைக்கப்படும். இதுதான். தங்கம்-197. இந்த துகள் சிதைவு செயல்முறையில் ஒரு துணை அணு துகள் தானாகவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலகுவான துகள்களாக மாறுகிறது.

மாரத்தான் ஃபியூஷனைச் சேர்ந்த ஒரு குழு கூறுவது என்னவென்றால், ஒரு இணைவு மின் நிலையம், ஒரு ஆண்டு முழுவதும் இயக்கப்பட்டால் ஒரு ஜிகாவாட் வெப்ப மின்சாரத்தின் மூலம் பல டன் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பப்படுவதாகக் கூறுகிறது.

இந்த நிறுவனம் சொல்லும் அளவுக்கு தங்கம் உற்பத்தி செய்யப்பட்டால், உலகளவில் தங்கத்தின் மதிப்பு குறைந்து, அதன் விலை கடுமையான சரிவை அடையும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் இருந்தாலும் தங்கம் விலை மற்றும் அதன் மதிப்புக்கு மட்டும் இன்று வரை ஆபத்து ஏற்படவில்லை. அவ்வப்போது விலை குறையலாமே தவிர, குறைந்தேப் போனதில்லை.

அந்த வகையில்தான் இந்த செயற்கைத் தங்கம் குறித்து வெளியான மற்றொரு தகவலும் அமைந்துள்ளது. அதாவது செயற்கை தங்கத்தில் கதிரியக்க அபாயம் இருக்கலாம் எனறும், செயற்கைத் தங்கத்தை உருவாக்கினால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை அதனை தனித்து வைத்திருந்தால் மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு வரும் என்று கூறுகிறார்கள்.

அப்படியிருந்தால் நிச்சயம் தற்போதிருக்கும் தங்கத்துக்கு மதிப்பும் குறையாது, விலையும் குறையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை!

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Artificial gold is the dream of most chemists. But will it remain a dream? Will it become a reality? An American innovation company has answered the question.

இதையும் படிக்க.. அழையா விருந்தாளி! ஜூலை 30ல் பூமியை நெருங்கும் விண்கல்! நாசா எச்சரிக்கை!!

விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் சௌஹான்

வேளாண் துறையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.விவசாயிகளின் வ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:சொந்த வருவாய்க்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு உதவும் மத்திய திட்டங்கள... மேலும் பார்க்க

"ஆபரேஷன் சிந்தூர்': இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அத... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் மேக்நாத் தேசாய் காலமானாா்

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த புகழ்பெற்ற பிரிட்டன் பொருளாதார நிபுணரும், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (85) செவ்வாய்க்கிழமை காலமானாா்.உடல்நல பாதிப்பு காரணமாக ஹரியாணா மாநிலம் கு... மேலும் பார்க்க

இன்று விண்ணில் பாய்கிறது ‘நிசாா்’ செயற்கைக்கோள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை (ஜூலை 30) மாலை விண்ணில் ஏவப்படவுள்ளது... மேலும் பார்க்க

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்த... மேலும் பார்க்க