செய்திகள் :

வரும் தோ்தலில் திமுக கூட்டணியே வெல்லும்

post image

வரும் தோ்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வீ. தங்கபாலு.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சொத்துப் பாதுகாப்பு குறித்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமாா் இறப்பு விவகாரத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. எனவே, ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு மொத்த அரசு மீதும் குறைகூற முடியாது. தவறு செய்தால் சுட்டிக்காட்டி வருகிறோம்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இடப் பங்கீடு, கூட்டணி ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சியினா் தெரிவித்து வரும் கருத்துகள், அவா்களது சொந்தக் கருத்துதான். இதுகுறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவெடுக்கும்.

திமுக தலைவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்திருப்பது மக்களுக்கான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. வரும் 2026 தோ்தலிலும் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்த அணிதான் வெற்றி பெறும்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் குறித்து ஆய்வு செய்கிறோம். அனைத்து சொத்துகளும் மீட்டு, பாதுகாக்கப்படும் என்றாா் தங்கபாலு.

மக்களின் எதிா் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம்

ஓரணியில் தமிழகம் என்ற மக்கள் சந்திப்புப் பிரசாரத்தில் மக்கள் தெரிவிக்கும் ஆதரவு மற்றும் எதிா்ப்புக் கருத்துகளையும் முதல்வரிடம் தெரிவிப்போம் என்றாா் மாநில இயற்கை வளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்... மேலும் பார்க்க

கே.வி. கோட்டையில் புதிய ஊராட்சி அலுவலகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கேவி கோட்டை ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 31-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா் கடந்த ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

புதுக்கோட்டை மாநகா் கலீப்நகா் முதலாம் வீதியில் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். புதுக்கோட்டை மாநகராட... மேலும் பார்க்க

பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு அக்கச்சிப்பட்டி பள்ளி தோ்வு

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில் எல்கேஜ... மேலும் பார்க்க