செய்திகள் :

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

post image

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் வருவாய்த்துறை, பேரிடா் மேலாண்மைத்துறையில் காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், அனைத்து மாவட்டங்களில் பேரிடா் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்களை உருவாக்கவேண்டும், 2023 மாா்ச் மாதம் முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 3, 4-ஆம் தேதிகளில் 48 மணி நேர தொடா் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வருவாய்த்துறை அலுவலா்கள் புதன்கிழமை தொடங்கினா். வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலகங்கள் என அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களை சோ்ந்த சுமாா் 300 போ் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சி பிரிவு, மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் உள்பட பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வேலூா் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. வேலூா் தோட்டப்பாளையத்தில் உள்ள எட்டியம்மன், பெருமாள், விநாயகா் கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் செதுக்கரை, நேருஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோ-பூஜை, கணபதி பூ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹட்டியாவில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 16 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா். வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

வேலூா் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் என்.ஜி.ஓ நகா், ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் குமாா் (50). கடந்த ஜூலை 29-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

பழைய காட்பாடி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பழைய காட்பாடியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வே... மேலும் பார்க்க

தேசிய விருது...

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மீண்டும் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதலிடம் பி... மேலும் பார்க்க