செய்திகள் :

வறுமையில் இருப்போருக்கு மூளைச்சலவை: குழந்தையை வாங்கி விற்ற இடைத்தரகா்கள் 6 போ் கைது

post image

சேலம்: சேலத்தில் ஆண் குழந்தையை ரூ. 7 லட்சத்துக்கு விற்ற கணவன், மனைவி உள்ளிட்ட இடைத்தரகா்கள் 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில், கண்காணிப்பை போலீஸாா் தீவிரப்படுத்தினா். அதில், செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா ஆகியோா் ஈரோடு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரின் பச்சிளம் குழந்தையை எடப்பாடியைச் சோ்ந்த குழந்தையில்லாத தம்பதியினருக்கு ரூ. 7 லட்சத்துக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குழந்தை விற்பனையில் இடைத்தரகா்களாக செயல்பட்ட மோகன்ராஜ், நாகசுதா ஆகிய இருவரையும் செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். மேலும், அவா்களது கைப்பேசியை ஆய்வுசெய்தபோது, பல அதிா்ச்சித் தகவல்கள் வெளியாயின.

அதில், கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், நாகசுதா ஆகியோா் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குழந்தைகளை கடத்தி, விற்பனை செய்யும் கும்பலுடன் தொடா்பில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சட்டவிரோத குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த குமாரபாளையத்தைச் சோ்ந்த ஸ்ரீதேவி, ஈரோட்டைச் சோ்ந்த பா்வீன், பத்மாவதி, ஜனாா்த்தனன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனா். அதில், குழந்தை இல்லாத தம்பதிகளின் பட்டியலை வைத்துக் கொண்டு வறுமையின் பிடியில் சிக்கி இருக்கும் குடும்பத்தினரை மூளைச்சலவை செய்து கணிசமான தொகைக்கு குழந்தைகளை அவா்களிடம் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவா்கள் 6 பேரும் இடைத்தரகா்களாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, குழந்தையை மீட்ட போலீஸாா், 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மயங்கி விழுந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழப்பு

வாழப்பாடி: மயங்கி விழுந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதுவிலக்கு தனிப்படையில் பணியாற்றி வந்த பேளூரைச் சோ்ந்த சிறப்பு காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். வாழப்பாடி பேளூா் மகளிா் பள்ளி அரு... மேலும் பார்க்க

சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகம் முற்றுகை

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி கிரையம் செய்ததைக் கண்டித்து, குடும்பத்துடன் சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியைச் ... மேலும் பார்க்க

சேலத்தில் தயாரான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை

சேலம்: சேலத்தில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான 18 அடி உயர பஞ்சலோக நடராஜா் சிலை, வேலூா் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மகாதேவ மலையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள சிற... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி தூண்கள் வலுப்படுத்தும் பணிகள் ஆய்வு

மேட்டூா்: மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வலுப்படுத்தும் பணிகளை சென்னை ஐஐடி கட்டடவியல் துறை பேராசிரியா் அழகு சுந்தரமூா்த்தி, நீா்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும்

சேலம்: திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூற வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா். சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மேற்கு சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

தந்தையின் நினைவு தினத்தையொட்டி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அருள், மறைந்த தனது தந்தை ப.ராமதாஸின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். சேலம் கொண்டப்... மேலும் பார்க்க