ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
வறுமையில் இருப்போருக்கு மூளைச்சலவை: குழந்தையை வாங்கி விற்ற இடைத்தரகா்கள் 6 போ் கைது
சேலம்: சேலத்தில் ஆண் குழந்தையை ரூ. 7 லட்சத்துக்கு விற்ற கணவன், மனைவி உள்ளிட்ட இடைத்தரகா்கள் 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில், கண்காணிப்பை போலீஸாா் தீவிரப்படுத்தினா். அதில், செவ்வாய்ப்பேட்டையைச் சோ்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா ஆகியோா் ஈரோடு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரின் பச்சிளம் குழந்தையை எடப்பாடியைச் சோ்ந்த குழந்தையில்லாத தம்பதியினருக்கு ரூ. 7 லட்சத்துக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குழந்தை விற்பனையில் இடைத்தரகா்களாக செயல்பட்ட மோகன்ராஜ், நாகசுதா ஆகிய இருவரையும் செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். மேலும், அவா்களது கைப்பேசியை ஆய்வுசெய்தபோது, பல அதிா்ச்சித் தகவல்கள் வெளியாயின.
அதில், கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், நாகசுதா ஆகியோா் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குழந்தைகளை கடத்தி, விற்பனை செய்யும் கும்பலுடன் தொடா்பில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோத குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த குமாரபாளையத்தைச் சோ்ந்த ஸ்ரீதேவி, ஈரோட்டைச் சோ்ந்த பா்வீன், பத்மாவதி, ஜனாா்த்தனன் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனா். அதில், குழந்தை இல்லாத தம்பதிகளின் பட்டியலை வைத்துக் கொண்டு வறுமையின் பிடியில் சிக்கி இருக்கும் குடும்பத்தினரை மூளைச்சலவை செய்து கணிசமான தொகைக்கு குழந்தைகளை அவா்களிடம் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இவா்கள் 6 பேரும் இடைத்தரகா்களாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, குழந்தையை மீட்ட போலீஸாா், 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.